Saturday, February 20, 2016

Ettiyapuram Ettappan.

#எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது.
எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் #எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் எட்டப்பன் என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் வழிவந்தவர்கள் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர், பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு.

எட்டப்பன் நல்லவனா..??கெட்டவனா..??

'பாரதியார் எட்டப்பனை விரும்ப காரணம்....???
சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார்.தவிர உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்திருக்கிறார்.எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியில் இருந்துள்ளது........

எட்டப்பன் தமிழ் வளர்ச்சிக்கும் , ஆன்மிக வளர்ச்சிக்கும் பாடு பட்டு வந்துள்ளனர் . கழுகுமலை முருகன் கோவில் போன்ற பல கோவில்களை கட்டியும் , இசுலாமியர்கள் , கிருத்துவர்களை ஆதரித்தும் வந்துள்ளனர்.

பொதுவாக பங்காளி ( ஒரே இனத்தை சேர்ந்தவர்களுடன் ) சண்டை , சச்சரவு வருவது இயல்பே . அதே போல எட்டயபுரமும் , பாஞ்சாலங்குரிசியும் அருகருகே பாளையம் என்பதால் இவர்களுக்குள் எல்லை தகராற

எட்டயபுரம் அரண்மனையில் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர், கடிகைமுத்துப் புலவர். தமிழ்ப் புலமை மிக்க மன்னர் எட்டப்பருக்கு மிகவும் நெருக்கமானவர். அரண்மனையிலிருந்து அவரை அழைத்துவர நித்தமும் அரசர் பல்லக்கு அனுப்புவார். எல்லா வசதிகளையும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்த புலவர், முதுமையில் நோய்வாய்ப்பட்டார். "நாலு வைத்தியரும் நம்புதற்கு இல்லை' என்று கூறிவிட்டனர்.

இச்செய்தி கேட்ட மன்னர், புலவரைப் பார்க்க வந்தார். அவரைப் பார்த்து மனம் வருந்தினார். புலவரின் ஒரே மகளும் அழுது புலம்பினாள். அந்த நேரமும் நெருங்கியது. உறவினர்கள், புலவரின் மகளை நோக்கி, ""அம்மா! பஞ்சைப் பச்சைப் பாலில் நனைத்து அப்பாவின் வாயில் பிழி'' என்று கூறினார்.

அப்போது பஞ்சு அங்கு இல்லாததால், பழைய வெள்ளைத் துணியை அதற்குப் பயன்படுத்தினாள் மகள். புலவர், வாயில் பால் விழுந்ததும் முகம் மாறினார். ""அப்பா! பாலும் கசக்கிறதோ?'' என அவள் கேட்க, அவர், ""பாலும் கசக்கவில்லை; பாலைப் பிழிந்த துணியும் கசக்க (துவைக்க) வில்லை'' எனத் தான் இறக்கும் தருவாயிலும் தமிழில் விளையாடினார்.

""அப்பா அப்பா'' என மகள் அழ, ""அழாதே அம்மா! இந்த ஓர் அப்பன் போனால் என்ன? உன்னைக் காப்பாற்ற எட்டு அப்பன் (எட்டப்பன்) இருக்கிறான்; ஏன் கவலைப்படுகிறாய்?'' என்று கூறிக் கண் மூடினார்.

மன்னர் மகளது கரம் பற்றி, "நானிருக்கிறேன் உன் தந்தையாக'' என்று ஆறுதல் கூறினார். புலவர்கள் வாழ்வில் தமிழ் எப்படியெல்லாம் விளையாடி இருக்கிறது பாருங்களேன்!

நயவஞ்சகன் புதுக்கோட்டை தொண்டைமான்

கல்தோன்றி மண்தோன்றா காலத்து வாளோடு முன்தோன்றிய மூத்த இனம் நமது இனம் . அதே போல இந்தியாவில் ஆங்கிலேயர்களை கண்டு அஞ்சி அவனுக்கு வரி செலுத்த அனைத்து பாளயகாரர்களும் சரணடைந்த போதிலும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மு ஆங்கிலேயர்களுக்கு வரிசெலுத்த மறுத்ததோடு ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரப்போர் புரிந்தார் என்பது வரலாறு . 

ஆங்கிலேய ஆவணங்கள் ஆகட்டும் , கால்டுவெல் சரித்தர நூலாகட்டும் , ஆங்கிலேயர்கள் முதல் மா .பொ.சி வரை வியந்த பாளையக்காரர் கட்டபொம்மு என்பது அனைவரும் அறிந்த ஒன்று . 

வீரபாண்டிய கட்டபொம்முவை காட்டி கொடுத்தது எட்டயபுரம் ஜெகவீர பாண்டிய எட்டப்ப நாயக்கர் , காட்டி கொடுத்தான் எட்டப்பன் என்றும் ஒரு வரலாற்று பிழை நம் நாட்டில் நிகழ்ந்துள்ளது . உண்மையில் எட்டபன்னுகும் , கட்டபொம்மனுக்கும் என்ன தகராறு , யார் காட்டி கொடுத்தவன் என்பதை பற்றியும் பாப்போம் ,. 

வீரபாண்டியன் - எட்டப்பன் :

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் பெல்லாரி, விஜயநகரம் போன்ற பகுதிகளில் இருந்து இசுலாமியர்களின் படையெடுப்பில் இருக்கும் இடங்களில் இருந்து ஒரு நாட்டின் ஆயிரகணக்கான ஒரே சாதியினை சேர்ந்த மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயருகிறார்கள் . அவர்கள் தான் தற்போதைய கம்பளத்தார் வீர மக்கள் . 1000 வருடங்களுக்கு முன்பும் இவர்கள் தெலங்கான , ஆந்திர பகுதியை ஆட்சி செய்தவர்களே , இப்படி வரலாறு நெடுகிலும் ஆட்சி செய்த காரணத்தால் தமிழகதிற்கு வந்தும் ஆட்சி செய்யவேண்டும் என்று எண்ணினார்கள். 

இவர்கள் தமிழ் நாட்டிற்க்கு வந்த காலம் ( கி.பி .1000 - 1020 ) இக்காலத்தில் இங்கு சேர , சோழ , பாண்டியர்களின் ஆட்சி நடந்து வந்துள்ளது . ராஜகம்பளம் மக்கள் குழுவாக வாழக்குடியவர்கள். இவர்கள் தங்களுக்கென பகுதிகளை தேர்ந்தெடுத்துக்கொண்டு அங்கு இவர்களே குறுநில மன்னர்களாக வாழ்ந்து வந்துள்ளனர் . இவ்வாறு இவர்கள் வாழும் நிலையில் ஒரு ஒரு குழுவிற்கும் ஒரு பெயர் வேய்துகொண்டு கடுமையான சட்டதிட்டங்களுடன் வீரமுடன் வாழ்ந்து வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் சில்லவார் என சொல்லப்படும் வீரமறவர்களின் தலைமையில் எட்டயபுரமும் , தொகலவார் எனப்படும் வீரபரம்பரைக்கு பாஞ்சாலங்குரிசியும் , போடிநாயக்கனூர், திண்டுக்கல் , கரூர் , நாமக்கல் , மணப்பாறை , தேனி , விருதுநகர் போன்ற பகுதிகளில் தங்கள் குழுக்களை அமைத்துக்கொண்டு ஆட்சி செய்து வந்துள்ளனர் . 

பொதுவாக பங்காளி ( ஒரே இனத்தை சேர்ந்தவர்களுடன் ) சண்டை , சச்சரவு வருவது இயல்பே . அதே போல எட்டயபுரமும் , பாஞ்சாலங்குரிசியும் அருகருகே பாளையம் என்பதால் இவர்களுக்குள் எல்லை தகராறு வருவதும் இயல்பே . ஆனால் எட்டயபுரத்து மன்னரும் , வீரபாண்டியரும் சண்டை இட்டதாக வரலாறுகள் இல்லை ஏனெனில் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் . இவர்களுக்குள் மனஸ்தாபம் இருந்து வந்ததே அல்லாமல் பகையோ , சண்டையோ வந்ததாகவும் தெரியவில்லை . இவர்களின் பிரிவை பயன்படுத்திகொண்ட ஆங்கிலேயன் இவர்களை பிரித்து பகைமையை உருவாக்கி அதன்மூலம் இவர்களை அழித்துவிடலாம் என்று எண்ணினான் . அவன் நினைத்தது போலவே இருவரிடமும் கலகம் செய்து பகையாளி ஆக்கினான். ஆங்கிலேயர்களுக்கு எட்டபனும் உதவினார் என்பதும் உண்மை ஏனெனில் இருவருக்கும் பகை இருந்து வந்துள்ளது , இப்படி நடப்பது ஒன்றும் வியப்பு இல்லை . எட்டப்பன் கட்டபொம்மனிடம் நேரடியாகவே தன் எதிர்ப்பை காட்டி உள்ளார் . இதுவே தமிழக புரனானுருகளில் காணப்படும் மன்னரின் ஆண்மை வீரம் . 

ஆனால் ஆங்கிலேயர்கள் கட்டபொம்முவை அழிக்க எண்ணி வந்த நிலையில் கட்டபொம்மு ஊர் ஊராக திரிந்து கடைசியில் புதுக்கோட்டை மன்னன் தொண்டைமானிடம் நட்புணர்வோடு ஆதரவு கேட்டு அவன் அரண்மனைக்கு செல்கிறார் , ஆனால் துரோகி தொண்டைமான் கட்டபோம்முவிற்கு விருந்தளித்து உணவு உண்ணும் வேளையில் காட்டிகொடுதான் . வீரமிக்க ராஜ கம்பளத்து நாயக்கர் மக்கள் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார்கள் , மானமும் வீரமும் இரு கண்களாக வாழக்குடியவர்கள் . பகை என்று வந்தால் நேரடியாக போரிடகூடியவர்கள் . 

உண்ண உணவளித்து , இருக்க இடமும் கொடுத்து , நெஞ்சீரம் இல்லாமல் துரோகம் செய்ய ராஜ கம்பளம் மக்கள் என்றும் சென்றது இல்லை , கம்பளத்தார் வாழும் மண்ணில் ஈரம் இல்லை என்றாலும் , மனதில் ஈரம் கொண்டு வாழ்பவர்கள் . 

எட்டயபுர சமஸ்தானம் என்பது மிகபழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க நாடு , தனி நாடாக ஏறக்குறைய 500 கிராமங்களுக்கு மேல் தன் ஆட்சிக்கு உட்படுத்து தன்னாட்சி நாடாக 800 வருடகாலம் இருந்து வந்துள்ளது . எட்டயபுரம் அரசர்கள் தமிழ் பற்று கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர் , தனது தாய் மொழி தெலுங்கு என்றாலும் தமிழ் மீது மிகுந்த பற்று கொண்டு வந்தனர் . மகாகவி சுப்ரமணிக்கு , பாரதி பட்டம் கொடுத்ததே எட்டயபுர ராஜா தான் , பாரதி பல பாடல்களில் எட்டப்பரை எட்டயபுர அரசர்களை புகழ்ந்து வந்துள்ளார் . சங்கீத மும்மூர்த்தியான முத்துசாமி தீட்சிதர் , சீறாப்புராணம் இயற்றிய உமறுபுலவர் போன்ற பல புலவர்களை ஆதரித்து வந்துள்ளனர் . 

தமிழ் வளர்ச்சிக்கும் , ஆன்மிக வளர்ச்சிக்கும் பாடு பட்டு வந்துள்ளனர் . கழுகுமலை முருகன் கோவில் போன்ற பல கோவில்களை கட்டியும் , இசுலாமியர்கள் , கிருத்துவர்களை ஆதரித்தும் வந்துள்ளனர் . படை வீரர்கள பலரை கொண்டு வீரமிக்கவர்கலாக வாழ்ந்து வந்துள்ளனர் , குமாரகம்பன ( நாயக்கர் ஆட்சிக்கு தந்தை ) , நாகம்மா நாயக்கர் , திருமலை நாயக்கர் போன்ற மன்னர்களுக்கும் பெரும்படை கொடுத்து உதவி வந்துள்ளனர் . ராமநாதபுர சேதுபதியையும் அடக்கி வந்துள்ளனர் .

ஆனால் இப்படிப்பட்ட பெருமைகளை கொண்ட எட்டப்பர் வம்சத்தை கதைக்காக மிகைபடுதிக் காட்டி உள்ளனர் . உண்மையில் துரோகம் செய்தது வரலாற்றில் மன்னிக்க முடியாத செயலை செய்தது கள்ளன் புதுக்கோட்டை தொண்டைமான் தான் , மருது பாண்டியர்களை காட்டி கொடுத்ததும் , திப்பு சுல்தானுக்கு எதிராகவும் வாழ்த்த கள்ளன் தான் புறநாறு சொல்லும் போர் துரோக மன்னன் . ஆனால் கலியாபூர் காட்டில் கட்டபொம்மு தங்கி இருந்த நிலையில் அங்குள்ள கள்ளர்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்தும் இன்றும் சிவகங்கை , புதுகோட்டை பகுதிகளில் வாழும் கள்ளர் இனத்தில் சிலருக்கு குல தெய்வமாகவும் இருபது முக்கிய வரலாற்று நிகழ்வு . தனது இனத்தை சேர்ந்த மன்னன் காட்டி கொடுத்ததை அறிந்த கள்ளர் மக்கள் நாணினர் என்றும் , கட்டபோம்முவையே தெய்வமாக கொண்டார்கள் என்றும் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது . 

உணவளித்து காட்டிகொடுத்த புதுக்கோட்டை தொண்டைமானின் துரோகம் உலக வரலாறுகளில் மன்னிக்க முடியாத ஒன்றானது .. தற்போது பாடப்புத்தகங்களில் கட்டபொம்மனை பற்றிய பாடத்தில் கூட ( சமசீர் கல்வியில் ) தொண்டைமானின் துரோகம் என்று தான் இருகின்றது , எட்டப்பரை பற்றி........?#Ettiyapuramettappan

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...