Sunday, February 14, 2016

Agriculture

இந்த மண்ணும்  மக்களும்  செழித்து  நெடுநாள் வாழ வேண்டுமென்றால் இந்த மண்ணில்  செழித்திருந்த பண்பாட்டிற்கு நாம் திரும்பவேண்டும்.
கீழ்க்கண்ட செயல்பாடுகள்  மிக அவசியம்.

1. 1952 முதல் 1967 வரை 15 ஆண்டுகள் 25 கோடிகள் செலவிட்டு  அமெரிக்க அறக்கட்டளைகள் கட்டாயமாக இந்தியா மீது திணித்த பசுமைப்புரட்சி  இன்று  வளமான டெல்டா நிலங்களை நாசமாக்கியுள்ளது. நிலம் ,நீர் ஆகியவைகளை நச்சாக்கி மக்களின் ஆரோக்கியத்தை நாசமாக்கும் கொடிய நோய்களைத் தந்துள்ளது.

பசுமைப்புரட்சி ஒரு சூது.  தூரவீசுவோம். இயற்கைவழி விவசாயத்திற்கு திரும்புவோம்.

2.அமெரிக்காவில் இருந்து கோழிக்கால்கள், சோளப்பொறி,  ஓட்ஸ் ,  தடைசெய்யப்பட்டு குருகிய காலத்தில் ,மீண்டும் வந்துள்ள  மாகி , எண்ணற்ற சாக்லேட்,பிஸ்கட்  வகைகள் , பெப்சி ,கொகோபோன்ற குளிர்பானங்கள் , மினெரல் வாட்டர்.......ஊடகங்கள் வீசுகின்ற காசுகளை பொறுக்கிக்கொண்டு இந்த உணவுக்கு  எத்தனை பேரை ஆடவிடுகிறார்கள்.
நமது பாரம்பரிய உணவு வகைகளை அழித்து,அது உற்பத்தியாகும் இடம்,மனிதர்களை அழிக்க வருகிறார்கள்.நமது உணவுகள், நமது தானியங்கள்,மற்றும் எண்ணற்ற பொருட்கள் நமக்கு உணவாகவும்,மருந்தாகவும்  நின்று காப்பவை.இதை சிதைப்பவர்களை  சமுதாய விரோதிகளாக அழிக்கவேண்டும். சாராயம் குடிப்பேன்,குட்கா போடுவேன், போதை உட்கொள்வேன்  அது எனது சுதந்திரம் என விவாதிப்பவர்கள்  சமுதயக்கட்டுப்பாடு இத்தகைய மனிதர்களுக்கு என உணர்த்தவேண்டும்.

அன்னிய உணவுகள்,பானங்கள் ஆகியவைகளை புறக்கணிப்போம்.

3.நாட்டின் எந்த பிரச்சினைகளைப்பற்றி பேசினாலும்  thats not my problem  என்று கூறி யான்கி தோரணையில் தோளைக்  குளுக்குபவர்கள்  இந்த சமுதாயத்தின் நட்பு சக்தி அல்ல .காசுக்கு எதையும் செய்து தர இவர்கள் தயாராக இருப்பவர்கள்.  அன்னிய கம்பெனிகளுக்கு பல வித கையாட்கள் தேவைப்படுகிறார்கள்

4.இன்றுவரை  மத்திய,மாநில கட்சிகள்   காவிரி நீர் பிரச்சினை, பாறை வாயு ஓ என் ஜி.சி சிக்கல், கெயில்,கூடங்குளம், மீனவர் பிரச்சினை,மணல் கொள்ளை , கார்பாறைகள் கொள்ளை,விவசாய விலைபொருட்களுக்கு தரவேண்டிய விலையை  மூன்றில்  ஒரு பங்காக அழுத்தி வைக்கும்  அமெரிக்க அடிவருடியாக ஆகிப்போன  இந்திய அரசு---இன்னும் பல பிரச்சினைகள்,எதிர்கால நம்பிக்கைகளாக வளர வேண்டிய குழந்தைகளுக்கு சரியான பள்ளி வசதி இல்லை , பள்ளிப்படிப்பு ,மேற்படிப்பு  யாவற்றையும் கொள்ளையடிக்கும் கல்வி வியாபாரிகளுக்கு  விற்ற அரசுகள்---எவ்வளவோ .........

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...