
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் சட்ட புத்தகங்கள் விற்கும் சீதாராமன் கம்பெனி மூலமாக இந்த இரண்டு நூல்களை பெற்றேன். குமரப்பாவை பற்றி வேணு மாதவ் கோவிந்த், தீபக் எழுதிய நூல் மேலெழுந்தவாரியாக பார்த்தேன். படித்துக்கொண்டிருக்கின்றேன். குமரப்பாவைப் பற்றிய நல்ல பதிவு. பாரம்பரிய தொழில்கள், பொருளாதாரம் பற்றியதான செய்திகள் காந்திக்கும், அவருக்கும் இருந்த நெருக்கம், அயல்நாட்டு தொடர்புகள், உண்மையான கிறித்து மார்க்க ஊழியராகவும், கல்லுப்பட்டி ஆசிரம வாழ்க்கைப் பற்றியும் சொல்லியுள்ளார். இன்றைக்கு அரசியலில் தறுதலைகளும், அரை வேக்காடுகளும் வலம் வரும்போது குமரப்பா என்ற காந்தியிடமே நேருக்கு நேர் வினா எழுப்பிய நேர்மையாளரைப் பற்றி இன்றைய சமுதாயம் அறியவில்லையே என்பதுதான் கவலை.

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி அவரைப் பற்றி விரிவான நூலை வெளியிட்டு கொண்டாடுகின்றது. ஆனால் நமக்கு அவர் யார் என்றே தெரியாத வெட்கக்கேடான நிலை.
ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி வெளியிட்ட ராகுல் சாங்கிர்த்தியாயன் மாபெரும் ஆளுமை. பொதுவுடைமை தத்துவம், மானிட நேயம், பௌத்தம் மதங்களுக்கு இடையே நேரம் பிரச்சினைகள் என்றெல்லாம் உலகம் முழுவதும் சுற்றி ஆய்வு நடத்தியவர். வால்காவிலிருந்து கங்கை வரை என்று பல அரிய நூல்களை எழுதியவர். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தமிழையும் கற்றார். அவரைப் பற்றி விரிவான தொகுப்பு நூலாக வியன்னா பல்கலைக்கழக அல்கா ஆத்ரேய சூடால் என்ற பேராசிரியர் அம்மையார் எழுதியுள்ளார். இவரை வியன்னா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்றார். இந்த நூலும் அவசியம் படிக்கவேண்டியது. எப்படியோ இந்தியர்கள் கொண்டாடாத குமரப்பாவையும், ராகுல் சாங்கிர்த்தியாயனையும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.
No comments:
Post a Comment