தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் துரிஞ்சிப்பட்டி கிராம விவசாயிகள் கடந்த வாரம் யாருடைய உதவியும் இல்லாமல் விடியல் நீர் இறக்கம் பாசன திட்டத்தை உருவாக்கி உள்ளனர். 42 விவசாயிகள் ஒருங்கிணைந்து கூட்டுறவு முறையில் சுமார் 90 லட்சத்தை முதலீடு செய்து தங்களுடைய நிலங்களுக்கு நிலத்தடி நீர் மூலமாக பாசன வசதி பெற தங்களுக்கான தங்கள் திட்டத்தை வகுத்து முறைப்படுத்தியுள்ளனர். அரசுக்கு நீர் பாசனப் பிரச்சினையில் எத்தனை மனுக்கள் கொடுத்தாலும், பாலச்சந்தரின் "தண்ணீர் தண்ணீர்" திரைப்படத்தில் கோவில்பட்டி தாலுக்கா ஆபிசில் கொடுக்கின்ற மனு, குப்பைத் தொட்டிக்கு செல்வதைப் போன்ற கதைதான். ஆனால் சுயமரியாதையோடு துரிஞ்சிப்பட்டி கிராம விவசாயிகள் சுயமாக முயற்சிகள் எடுத்து சாதித்துள்ளனர். பாராட்ட வேண்டாமா? குளத்தையும், நிலத்தடி நீரையும் புனரமைத்து பாதுகாக்கும் இந்த கிராம மக்களைப் போல மற்ற கிராம மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு வரவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru
#Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...

-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment