
தென்பென்னையாறு மொத்தம் 432 கி.மீ ஓடி கர்நாடகத்தில்
112 கிலோ மீட்டரில் பாய்ந்து 128 கிலோமீட்டரில் ஓசூரை அருகே கெலவரப்பள்ளி அணை, 190வது
கிலோமீட்டரில் கிருஷ்ணகிரியில் கே.ஆர்.எஸ் அணை, 1950 அக்டோபர் மாதம் கட்டி
10.12.1957ல் பணிகளை முடித்தார்கள். அதற்கடுத்த நிலையில் சாத்தனூர் அணையானது 750 மீட்டர்
நீளமும், 222 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் 119 அடி உயரத்திற்கு தண்ணீரை சேமிக்கலாம்.
ஒரு காலத்தில் இந்த அணையில் சினிமா படப்பிடிப்புகள்
நடைபெற்றன. பச்சை பசேலென இருந்த மரங்கள் அனைத்தும் காய்ந்துவிட்டன. சுற்றுலா தலமாக
விளங்கிய இந்த இடத்திற்கு ஒரு நாளைக்கு 500 சுற்றுலா பயணிகளாவது வருவார்கள். இன்று
சொற்ப அளவிலேயே வருகின்றனர். தென்பெண்னை ஆற்றில் நீர்வரத்தும் இல்லை. இது கடலில் கடக்கும்
கடலூர் வரை இந்த நதியில் எங்கும் நீரே தென்படவில்லை.
சாத்தனூரைப் போல தான் மற்ற அணைகளும் பராமரிப்பின்றி
அதன் பொலிவை இழந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு போன்ற அணைகளிலும்
கூட இதே நிலை தான்.
#தென்பெண்னையாறு
#சாத்தனூர்_அணை
#Sathanur_dam
#South_pennar
#Krishnagiri
#Tiruvannamalai
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05-06-2017
No comments:
Post a Comment