Sunday, October 20, 2019

#விரக்தியுடன்_வாழும்_விவசாயி.


——————————————
இது உண்மையிலும் உண்மை .விவசாயி கொதித்தெழும் காலம் வெகுதொலைவில்லை மிக மிக அருகில் வந்து கொண்டு இருக்கிறது.சென்ற மாதம் திருநெல்வேலி காய்கறி மொத்த விலை சந்தை யில்,எனது வெண்டைக்காய் கிலோ ரூ2 க்கும் மறுநாள் ரூ5 கத்தும் இன்று ரூ10க்கும் விலைபோனது.அரசாங்க ஊழியர்களுக்கு முன்தேதியிட்ட அகவிலைப்படி அவர்கள் கேட்காமலே கொடுக்கும் அரசியல்வாதிகளின் அரசாங்கமே , தேர்தல் நேரத்தில் மட்டும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஜனநாயக கடமையை தவராமல் நிறைவேற்றுங்கள் என்று கூறி பதவியில் அமர்ந்தீர்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் என்ற திட்டத்தை 50%விவசாகளின் வேலைக்கு பங்களிப்பாக செய்திருக்கலாம் விவசாய பெருந்தலைவர் ஐயா நாராயணசாமி நாயுடு கூறியதுபோல் உன்தேவைக்குமட்டும் என்று உற்பத்தி செய்கிறாயோ அன்று தான் நீ மதிப்பு மிக்க விவசாயியாக வாழ்வாய் என்ற கூற்று விரைவில் நிறைவேறும்.

-கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
18-10-2019.

#விவசாயி

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...