Monday, October 28, 2019

அமர கவி பாரதி (பாஞ்சாலி சபதம்)

ஓரம் செய்திடாமே - தருமத்
துறுதி கொன்றிடாமே
சோரம் செய்திடாமே - பிறரைத்
துயரில் வீழ்த்திடாமே
ஊரையாளும் முறைமை - உலகில்
ஓர்புறத்துமில்லை
சாரமற்ற வார்த்தை! - மேலே
சரிதை சொல்லுகின்றோம்..
•••••••••••••••

"பொய்யுரைத்து வாழ்வார் - இதழில்
புகழுரைத்து வாழ்வார்
வையமீதில் உள்ளார் - அவர்தம்
வழியில் வந்ததுண்டோ?
செய்யொணாத செய்வார் - தம்மைச்
சீருறுத்த நாடி
ஐய நீயெழுந்தால் - அறிஞர் 
அவலமெய்திடாரோ?"...

-அமர கவி பாரதி
(பாஞ்சாலி சபதம்)


No comments:

Post a Comment

12 ஆண்டுகள் பாரதப் பிரதமராக மக்கள் சேவை, வரலாறு படைக்கும் திரு. நரேந்திர மோடி ஜி அரசு!

  12 ஆண்டுகள் பாரதப் பிரதமராக மக்கள் சேவை, வரலாறு படைக்கும் திரு. நரேந்திர மோடி ஜி அரசு! இன்றைய தினம் சென்னை கமலாலயத்தில், சுதந்திர இந்திய ...