Wednesday, January 4, 2023

#*எஸ்.எஸ்.வாசன்* ஆனந்தவிகடன், ஜூவி

#*எஸ்.எஸ்.வாசன்* 
(04 ஜனவரி 1903
26 ஆகஸ்ட் 1969) 

1926-ல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன் ' 1928-ல் எஸ். எஸ். வாசன் வாங்கினார். ஆனந்த விகடன் இதழுக்கு எஸ் எஸ் வாசனே ஆசிரியராக இருந்தார்.90 ஆண்டுகளாக  ஆனந்த விகடன் இதழ் வெளியாகி வருகிறது. ஜெமினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர். 1964 முதல் அவர் மறைவுவரை மாநிலங்களவை உறுப்பினராகப் (எம்பி)பதவி வகித்தார்.



ஆனந்தவிகடன், ஜூவி போன்றவை பாலசுப்பிரமணியன், மதன்,  ராவ், சுதாங்கன், அசோகன் ஆகியோர் இருந்த காலத்தில் சோபித்தன.  கி.ராவை ஜூவியில் ‘கரிசல் காட்டு கடுதாசி’யை எழுத வைத்ததில் அடியேனுக்கு முக்கிய பங்கு உண்டு. பின் கி.ரா. சில தொடர்களையும் எழுதினார். மாதம் ஒருமுறை பாலசுப்பிரமணியனை சந்திப்பது வாடிக்கையாகவும்   இருந்தது. 



 இன்றைக்கு விகடனுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்போது யார் அங்கே பத்திரிகையாளர்களாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்போது இந்த இதழ்களும் அப்போது போல ஜொலிக்கவும் இல்லை; சோபிக்கவும் இல்லை. சொல்ல வேண்டியது என் கடமை.

#ksrpost
4-1-2023

No comments:

Post a Comment

*All you have to decide is what to do do with the time that is given*

*All you have to decide is what to do do with the time that is given*. You can rise from anything. You can completely recreate yourself. Not...