பேராசிரியர் அ.ராமசாமி தமிழகம் அறிந்த நுன்மான் நுழைபுலம் கொண்ட ஆளுமை.
வரலாறு, தமிழ் இலக்கியம் மட்டும் இல்லாமல் ஆங்கில இலக்கியத்திலும் நிறைந்த ஆற்றலும் புலமையும் பெற்றவர்,வார்சா பல்கலகழகம், புதுவை பல்கலைகழகம், மதுரை பல்கலைகழகம் என பல கலாசாலைகளில் பணியாற்றினார், தற்போது திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்திலும் துறைத் தலைவராகவும்,மூத்த பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். நல்ல பன்பாளர்.
அவர் எழுதிய நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் என்ற நூல் தமிழக வரலாற்றை ஆய்வு செய்து எழுதப் பட்டது. உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட இந்த நூலை தற்போது என்.சி.பி.எச் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த நூலைப் பற்றி முன்னுரையில் பேரா. தி.சு.நடராசன் எழுதியுள்ள செய்திகள் :
அவர் எழுதிய நாயக்கர் காலம் - இலக்கியமும் வரலாறும் என்ற நூல் தமிழக வரலாற்றை ஆய்வு செய்து எழுதப் பட்டது. உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட இந்த நூலை தற்போது என்.சி.பி.எச் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்த நூலைப் பற்றி முன்னுரையில் பேரா. தி.சு.நடராசன் எழுதியுள்ள செய்திகள் :

இந்த ஆராய்ச்சிக்கு, இலக்கியங்களே மூலாதாரம். பின்னிடைக் காலத்து மொழியையும் அதன் பொருண்மையையும் உள்நுழைந்து வாசிப்புச் செய்தால் தெரியும், இது எவ்வளவு சிரமமானது என்று. இந்த மொழிக்கிடங்குக்குள் ஆழந்தெரியாமல் காலை விடக்கூடாதுதான். ஆனால் முத்துகளும் பவழங்களும் ஆழத்துக்குள் தானே படிந்து கிடக்கின்றன. ஆழங்கால் படுவது ஆராய்ச்சியின் அறைகூவல். அதனை அ.ராமசாமி ஏற்றுக்கொண்டு, இந்த இலக்கியங்களில் மூச்சடக்கி மூழ்கி முத்துக்களை வாரியெடுத்துத் தந்திருக்கிறார்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
05-09-2015.
05-09-2015.
#நாயகர் காலம் - இலக்கியமும் வரலாறும்
#naickers
#Prof.A.Ramasamy
#KsRadhakrishnan
#KSR_Posts
#naickers
#Prof.A.Ramasamy
#KsRadhakrishnan
#KSR_Posts
No comments:
Post a Comment