ஐ.நா.அறிக்கை இலங்கை அரசிடம் ஒப்படைப்பு. - Sri Lanka gets UN Report.
_________________________________________
இலங்கையில் 2001லிருந்து 2009வரை நடந்த போர்குற்றங்கள் குறித்தான அறிக்கை கடந்த 11-09-2015 அன்று இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்தான விவாதம் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்திலும் நடக்க இருக்கின்றது. அமெரிக்காவும் இலங்கையும் இதுகுறித்தான விவாதங்களை நடத்தி உள்ளகப் பொறிமுறையை கையாளுவதற்கான சூழல் நிலவுகின்றது.
ஐ.நா. அறிக்கையின் முத்திரையிட்ட இரண்டு பிரதிகள் இலங்கை அரசாங்கத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை ஆணையத்தில் முன்வைக்கப்படும் வரை இந்த அறிக்கைரகசியமாக வைக்கப்படும்.
போர்குற்றங்கள் குறித்த அறிக்கையில் விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தரப்பில் செய்திகள் வந்துள்ளது. ஆனாலும் போருக்கு காரணமான ராஜபக்ஷேவோ, அவர் சகாக்களோ, பாதுகாப்பு அதிகாரிகளோ போர்க்குற்றவாளிகள் என்று குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்காலத்தில் இடம்பெயர்ந்த சுமார் 3.50லட்சம் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க மகிந்த ராஜபக்ஷே மறுத்தது உட்பட சில குற்றசாட்டுகள் இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில் தமிழர்களைக் கொன்றுகுவித்த ராஜபக்ஷேவின் குற்றங்களை மூடிமைறைக்கின்ற விதமாகத்தான் இந்த அறிக்கை அமைந்துள்ளதாகத் தெரிகிறது. திரும்பவும் ஈழத்தமிழன் ஏமாற்றப்பட்டான்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
13-09-2015.
#KsRadhakrishnan
#KSR_Posts
#SrilankaTamilsIssue
#UNreport
Subscribe to:
Post Comments (Atom)
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி
#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...

No comments:
Post a Comment