Monday, September 14, 2015

தேசிய நதிநீர் இணைப்பு - Water Resources in india



இன்று காலை (14-09-2015) டெல்லியில், நதிநீர் இணைப்புக்குழு சென்னைக்கு வருகைதந்து தேசிய நதிகளை இணைப்பதைக் குறித்து மக்களிடம் கருத்துகள் கேட்க உள்ளதாக கேள்விப்பட்டேன். சரம்சக்திபவனில் அமைந்துள்ள நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு சென்றிருந்தபோது அங்கிருந்த அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

எனது தேசிய நதிநீர் இணைப்பு குறித்த வழக்கில் ஊச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்தான மேல்நடவடிக்கைகள் என்ன என் று அறிந்துகொள்ள அங்கு சென்றபோது இந்த செய்தி கிட்டியது.

இந்த குழு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் கருத்துகளை அறிய இருப்பதை அறிந்து, இது ஒரு நல்ல துவக்கம் என்று மகிழ்ச்சியடைந்தேன்.

அந்த அமைச்சகத்தில் பெற்றசில குறிப்புகளில்... சீனாவி்ன் நதிநீர் இணைப்பு குறித்த சில தரவுகளைப் பெறமுடிந்தது.

* கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சீனாவில் 1,20,000 கி.மீ தொலைவுகளில் நாட்டின் முக்கிய நீர்வளங்களை இணைத்து நீர்வழிச்சாலை உருவாக்கியிருக்கிறார்கள்.

உள்நாட்டுப்போக்குவரத்து, சரக்கு மரிமாற்றங்களுக்கு இந்த நீர்வழிச்சாலை பயன்படுத்தப்படுகிறது அதன் அளவீடு பயணிகள் : 10.73 billion persons/km. சரக்குப்போக்குவரத்து : 2,126.3 billion tons/km.
உலகின் மிகப்பெரிய நீர்மின்சக்தி உற்பத்தி நிலையத்தை உருவாக்கி இருக்கும் நாடு சீனா.

இண்ட்ஜியாவும் சீனாவும் கிட்டத்தட்ட சமகால அளவில்தான் சுதந்திரமாகச் செயல்படத் துவங்கின. இத்தனைக்கும் நீண்டகால உள்நாட்டுப்போர், 1937 முதல் 1945வரை ஜப்பானுடனான போர். போரில் கிடைத்த படுதோல்வி, புரட்சியில் இழந்த லட்சக்கணக்கான உயிர்கள் என்று சீனா சந்தித்த பாதிப்புகள் எண்ணிலடங்காதவை.

1948முதல் 1975வரை சீனா பெரிய அளவிளான முன்னேற்றங்கள் எதையும் கண்டிருக்கவில்லை.140கோடி மக்கள் தொகை கொண்டநாட்டில் 30சதவிகிதம்பேர் உடல் உழைப்ப்உக்குத் தகுதி இல்லாதவர்கள். 1978ல் சீனாவின் புதிய பொருளாதாரக் கொள்கை (socialism with Chinese characteristics) உருவாக்கப்பட்டது.

இன்றைக்கு உலகின் முதல் பொருளாதார சக்தியாக ( number 1 GDP nation ) உருவெடுத்து, ஏற்றுமதி வர்த்தக உலகத்தில் முதலிடம், பொருளாதார வளர்ச்சியில் முதலிடம், வாங்கும் சக்தி கொண்ட நாடுகளில் முதலிடம். உலக நாடுகளில், (அமெரிக்காவைத் தவிர) அதிக அளவில் அமெரிக்க டாலரை கையிருப்பு வைத்திருக்கும் ஒரே நாடு, அமெரிக்க பொருளாதாரத்தை அசைக்கும் அளவிற்கு வல்லமை கொண்ட ஒரு நாடு என்ற பெயர்களைத் தக்கவைத்திருக்கிறது.

உலகிலே அதிக அளவு படைவீரர்களைக் கொண்ட நாடு. ஐக்கிய நாடுகள் சபையில் (வீட்டோ அதிகாரம் கொண்ட) பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக உள்ள நாடு. உலகின் அதிவேக மற்றும் அதிக தூரத்திற்கு ஓடும் புல்லெட் ரெயில். உலகின் 3 மிகப்பெரிய, மிக நீளமான மேம்பாலங்கள். உலகில் அதிகபட்ச தூரத்திற்கு உள்நாட்டு நீர்வழிப்பாதையையும், அதில் போக்குவரத்தையும் உருவாக்கி இருக்கும் நாடு. உலகில் அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு. பாதுகாப்புத் துறையிலும், ராணுவ சாதனங்களின் உற்பத்தியிலும் தன்நிறைவு பெற்ற நாடு.
1990ல் இருந்து 2010 வரையுள்ள காலத்தில், தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு சராசரி GDPயை -11 % க்கு தக்க வைத்துக்கொண்ட நாடு. இந்த பெயர்களை எல்லாம் சாதித்திருக்கிறது.

1970களின் இறுதிப் பகுதியில், டெங் ஜியோபிங் (Deng Xiaoping ) அதிகாரப் பொறுப்பேற்ற பிறகு, சீனாவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப்பயணிகள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டார்கள். இன்று – உலகில் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் விரும்பும் நாடுகளில் 3வது நாடாக சீனா திகழ்கிறது. 2010ஆம் ஆண்டில் மட்டும் சீனாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட பயணிகள் எண்ணிக்கை மட்டும் 54.7 மில்லியன்.
இத்தனையும் சீனாவால் சாதிக்கமுடிந்தபோது இந்தியாவால் மட்டும் ஏன் முடியாமது போனது...?

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-09-2015.
#KsRadhakrishnan
#KSR_Posts
#WaterResourcesinIndia

No comments:

Post a Comment

#செண்பகவல்லிதடுப்புஅணைசீர்அமைப்பு கோரிக்கை , தென்மலையில் தென்காசி மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் (இன்று , 10-7-2025 காலை முதல் நடக்கும்) பங்கேற்று உரையாற்றிகிறேன். அனைவரும் வருக! •••• ச.பென்னிகுயிக் பாலசிங்கத்தின் பதிவு (ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்) *செண்பகவல்லி கால்வாய்---தாகம் தீர்க்குமா...!!!* 60 ஆண்டு காலங்களுக்கு மேலாக செண்பகவல்லி கால்வாய் தண்ணீருக்காக காத்துக் கிடக்கிறது தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள். மானாவாரி காடுகளுக்கு பெயர் பெற்ற கரிசல் காடுகளினூடாக ஏழெட்டு தலைமுறைகளாக பாய்ந்தோடி வந்த செண்பகவல்லி கால்வாய்த் தண்ணீர்,வேறு வழியேயின்றி இன்றைக்கு முல்லைப் பெரியாறு அணையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. 1965 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட நாளில் தொடங்கிய,விவசாயிகளின் போராட்டங்கள் இன்று வரை ஓயல்லை. இயல்பாகவே உச்ச நீதிமன்றம் மட்டுமல்ல,அது எந்த நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருந்தாலும் அதை ஒருபோதும் மதித்து நடைமுறைப்படுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டு கேரளாவின் மீது கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வரக்கூடிய குற்றச்சாட்டாகும். அது முல்லைப் பெரியாறாக இருக்கட்டும், பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, மலம்புழா, நெய்யாற்றின்கரை அணை என எல்லாவற்றிலும் அவர்களுடைய ஆதிக்கம் சுதந்திரத்திற்கு பின்னால் கொடிகட்டிப் பறக்கிறது. 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறை முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு, இன்னமும் திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலகத்திலுள்ள பரணில் தூங்கிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். அந்த அடிப்படையில் தான் அது செண்பகவல்லி கால்வாயியையும் அணுகுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. 40 ஆண்டு காலம் தொடர் சட்டப் போராட்டங்கள் நடத்தியும்கூட முல்லைப் பெரியாறு அணையில் அதன் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறோம் ஐந்து மாவட்ட விவசாயிகள். ஒருவேளை செண்பகவல்லி கால்வாய்க்கு தமிழ்நாடு உரிமை கோருமோ என்கிற கவலையில், கடந்த 2001 ஆம் ஆண்டு செண்பகவல்லி கால்வாயை உள்ளடக்கிய கோட்டமலை டிவிசன், மணலாறு டிவிஷன், மாவடி மற்றும் சுந்தரமலை டிவிஷன்களை பெரியார் புலிகள் காப்பகத்தின் கிழக்கு டிவிசனாக அறிவித்தது கேரள மாநில அரசு. சிவகிரியையொட்டி இருக்கும் இந்த சுந்தரமலை டிவிசன்தான், செண்பகவல்லி கால்வாயின் மையப் பகுதியாகும். அது இன்றைக்கு ஒரு புலிகள் காப்பகத்தின் அங்கமாக அறிவிப்பு செய்யப்பட்டு, வாசுதேவநல்லூர் அருகே இருக்கும் தரணி சர்க்கரை ஆலையிலிருந்து தலையணை செல்லும் வழியில் நிறுவனமயமாக்கப்பட்டிருப்பதும் நிதர்சனமான உண்மை. கிட்டத்தட்ட 777 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட பெரியார் புலிகள் காப்பகத்தில், செண்பகவல்லி கால்வாயை உள்ளடக்கிய கிழக்கு டிவிஷன் மட்டும் சுமார் 620 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. கொடுமை என்னவென்றால் இவையெல்லாம் முறையாக 1956 மொழிவழிப் பிரிவினையின் போது அளவீடு செய்யப்படாத பகுதிகளாகும். செண்பகவல்லி கால்வாய் இருக்கும் பகுதி தற்போது புலிகள் காப்பகத்தின் ஒரு அங்கம் என்கிற நிலையில் மறுபடியும் அதற்குள் சென்று நம்மால் கால்வாயை சீரமைக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. உலகமெல்லாம் நடக்கும் போர் அத்துமீறல்களால் கான்கிரீட் கட்டிடங்கள் எல்லாம் உடைந்து சிதறும் நிலையில், கிட்டத்தட்ட 40,000 ஏக்கர் பாசனப்பரப்புக்காக நாம் சீரமைக்கச் சொல்வது மொத்தமுள்ள 1603 மீட்டரில், வெறும் 400 மீட்டர் நீள கட்டுமானம் மட்டுமே. தென்காசி மாவட்டத்தில், மேற்குப் பகுதியில் மட்டும் செழித்துக் கிடக்கும் வாசுதேவநல்லூரை உள்ளடக்கிய சிவகிரி தாலுகா, எப்போதும் வறண்டு கிடக்கும் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் தாலுகாக்கள்... விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம், வெம்பக்கோட்டை, சாத்தூர் தாலுகாக்கள்... எப்போதும் வறண்டு கிடக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்கள்... என செழித்து கிடக்கும் மக்கள் தொகையும், பரப்பளவும் எதிர்காலத்தை நினைத்து பயந்து கிடக்கிறது. நிலத்தடி நீரே குதிரைக் கொம்பாகியிருக்கும் காலகட்டத்தில், செண்பகவல்லி கால்வாய் தண்ணீர் மறுபடியும் பாய்ந்தோடி வந்தால் அத்தனை ஊரும் கூமாபட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கேரளா இந்த செண்பகவல்லி கால்வாய் உடைப்பை சரி செய்வதற்கு அனுமதிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக நம்முன் எழுந்து நிற்கிறது. வருடத்திற்கு 2,700 டிஎம்சி தண்ணீரை கடலுக்குள் கொண்டு போய் சேர்க்கும் கேரளா, போகிறபோக்கில் இந்த தமிழகத்திற்கு 100 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது இந்த அப்பாவிகளுடைய இயலாக் குரல்கள். காது கொடுத்து கேட்கத்தான் கேரளாவில் யாரும் இல்லை. இந்த நிலையில் கால்வாய் அருகே ஒரு தங்குமிடத்தை அமைத்திருக்கும் பெரியார் புலிகள் காப்பகம்,அங்கு செல்வதற்கு கேரளாவின் வழியே பயண வழி இல்லாததால்,புலிகள் காப்பகத்தின் தலைமையகமான தேக்கடியில் இருந்து கம்பம் தேனி ஆண்டிபட்டி உசிலம்பட்டி பேரையூர் திருவல்லிபுத்தூர் ராஜபாளையம் சிவகிரி வாசுதேவநல்லூர் வழியாக வாகனங்களில் தன்னுடைய வனத்துறை பணியாளர்களை 10 நாட்களுக்கு ஒரு முறை அழைத்து வரும் பெரியார் புலிகள் காப்பகம், அவர்களை தலையணை முகாமில் தங்க வைத்த பிறகுதான், செண்பகவல்லி கால்வாய்க்கு தமிழக வனப் பகுதி வழியாக செல்ல அனுமதிக்கிறது. ஆனால் அந்த செண்பகவல்லி கால்வாய் இருக்கும் வனப்பகுதிக்குள், தமிழக வனத்துறையினர் செல்வதற்கு தடை இருக்கிறது என்பதையும் நினைவில் வையுங்கள். ஆயுதங்களை தூக்கிக் கொண்டு தமிழகத்தில் உள்ள தேனி மதுரை விருதுநகர் மாவட்டங்களின் வழியாக தென்காசி மாவட்டத்திற்குள் புகுந்து 5,000 அடி உயரத்தில் இருக்கும் செண்பகவல்லி கால்வாய்க்கு ஆயுதங்களை தாராளமாக கொண்டு செல்கிறார்கள் பெரியார் புலிகள் காப்பக வனத்துறை பணியாளர்கள். கேட்பதற்குத்தான் நாதிகளற்றுக் கிடக்கிறோம். இதுகுறித்து தமிழக அரசியல்வாதிகள் எந்த நிலையிலும் வாயே திறக்கவில்லை என்பது கசப்பான உண்மை.விதிவிலக்குகளும் இருக்கிறது. அரிதினும் அரிதானவராக வழக்கறிஞர் அண்ணன் கே. எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் இதற்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த செண்பகவல்லி கால்வாய் பிரச்சனை மேற்கண்ட மூன்று மாவட்டங்களில் விஸ்வரூபம் எடுக்குமானால், அரசியல்வாதிகளால் ஊருக்குள் நடமாட முடியாது என்பதை இந்த விவசாய சமூகம் செய்து காட்ட வேண்டும். இந்த நிலையில் வரும் பத்தாம் தேதி சிவகிரி அருகே இருக்கும் தென்மலை கிராமத்தில் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து ஒரு மாநாடு போல செண்பகவல்லி கால்வாய் மீட்பு போராட்டம் நடக்கவிருககிறது. முன்னத்தி ஏர்களாக அந்த ஒருங்கிணைப்புக்கு பணியை முன்னின்று செய்து வரும் அத்தனை பேருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை சொல்லி... நீண்ட காலமாக அந்தப் பகுதியில் செண்பகவல்லி கால்வாய்க்காக போராடிய இடையன்குளம் அண்ணன் ஜெயக்குமார் மற்றும் கரிவலம்வந்தநல்லூர் அண்ணன் கருணாநிதி போன்றவர்களையும் அழைத்திருக்கலாமா என்று முடிக்கிறேன். நன்றி ச.பென்னிகுயிக் பாலசிங்கம் ஒருங்கிணைப்பாளர் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

  #செண்பகவல்லிதடுப்புஅணைசீர்அமைப்பு கோரிக்கை , தென்மலையில் தென்காசி மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் (இன்று , 10-7-2025 காலை முதல் நடக்கும்) ப...