Sunday, June 5, 2016

Allur Seetharam Rajulu

அல்லூரி சீதாராம ராஜுலு,ஆங்கிலேய அரசுக்கு எதிராக போர் செய்து, பிடிபட்டு, தூக்கிலடப்பட்ட ஆந்திர மாநிலப் பழங்குடி மக்களது தலைவர் .அவர் பெயரிலேயே, ஈஸ்ட்மென் கலர்படம் எடுத்து வெளியிட்டார், விஜய நிர்மலா. வாட்ஸ் அப்பில் வந்துள்ள செய்தி ;

ஆயிரம் முறை என்னை சுட்டு கொலை செய்தாலும்
மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவேன்.
என் தேசம் விடுதலைகாற்றை  சுவாசிக்கும் வரை,,,

தனது 16வது வயதில்,
ஒரே வருடத்தில் சுயராஜ்யம், என்ற காந்திஜீயின் கோசத்தால் ஈர்க்கப்பட்டு தனதுகல்வி படிப்பை துறந்து, சுயராஜ் கோரிக்கை நிறைவேற மக்களை திரட்டி ஆயுதம் தாங்கிய புரட்சிக்கு தயார் செய்வதென களமிறங்கினான்,,
  காவல் நிலையங்களில் 500க்கு மேற்பட்ட பழங்குடி மக்களை திரட்டி தாக்குதல், அதில் பெரும் எண்ணிக்கையில் ஆயுதங்கள் கொள்ளை யடிக்கப்பட்டது. 
அவனதுகொரில்லா போர் தந்திரம் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களை அஞ்சி நடுங்க செய்தது

      நான்கு இடங்களில் போலீஸ் படையுடன் மோதலில் வெற்றி பெற்று,
இரண்டு பிரிட்டீஷ் அதிகாரிகளை சுட்டும் மேலும் இருவரை பாறைகளை உருட்டியும் கொலை செய்யப்பட்டனர்,
   அஸ்சாம், மலபார் போலீஸ் படையினர் பெரும் எண்ணிக்கையில் கிராம மக்கள் மீது கடும் பொருளாதார தடையும், அடக்கு முறை ஏவிபோது , மக்களை அதிலிருந்து காக்க விரும்பி,ஒரு இடத்தை குறிப்பிட்டு தன்னை கைது செய்து கொள்ளலாம் என்ற அவனது தகவலை பெற்ற பிரிட்டீஷ் மேஜர் கோட்டாலின், 
துரோக தனமாக, அந்த இளம் போராளியை,அதே இடத்தில் சரமாரியாக சுட்டு கொலை செய்தான்,
 அப்பொழுது அந்த தியாகியின் வயது 28 ...
 I922 முதல் 1924 வரை நடைபெற்ற
ரம்பா பழங்குடியினர் எழுச்சி நாயகன். 
அல்லூரி சீத்தாராம் ராஜீ,,,,,,,

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...