Wednesday, June 14, 2017

கொசஸ்தலை

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது.

இதனை எதிர்த்து  தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ஒரு தடுப்பணைக்கு 7 லட்சம் வீதம் 4 தடுப்பணைகளுக்கு 28 லட்சம் ரூபாய் மதிப்பு வாய்ந்த அணை பணி ஆரம்பித்தது ஆந்திரா..

இந்த தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்திற்கு கிடைக்கக் கூடிய தண்ணீர் கண்டிப்பாக குறையும்

ஆந்திர அரசை அணை கட்டுவதை தடுக்குமாறு பல முறை கூறியும் கேட்டகவில்லை என்றும்,

இது குறித்து தமிழக அரசிடம் புகார் செய்தும் நமது அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது என விவசாயிகள் கூறுவது விவசாயிகளின் அவல நிலையை எடுத்துரைக்கிறது..
அணை கட்டுவதை கண்டித்து ஆந்திராவின் சீதலக்குப்பத்தில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகினற்னர்.
#கொசஸ்தலை

#KSradhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
13-
14-06-2017
 

No comments:

Post a Comment