திருவாடுதுறை ஆதீனமும், 1947இல் இந்திய விடுதலையும்.
-------------------------
திருவாடுதுறை ஆதீனத்தோடு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்பு கொண்டு, இந்த ஆதீனம் வழக்குகள் தொடர்பாகவும், நிலக் குத்தகை பிரச்சனைகளிலும் மற்றும் நிர்வாக விடயங்களிலும் ஆதீனகர்த்தரை கும்பகோணத்தில் தங்கி அடிக்கடி சென்று சந்திப்பதும் உண்டு. ஆதீனத்த்தில் பெரிய நூல் நிலையம், ஏட்டுச்சுவடிகள் எல்லாம் உண்டு. நூல் நிலையத்தில் அருமையான, பழைய நூல்கள் கண்ணில் பட்டால் அதை மேலோட்டமாக வாசிப்பதிலும் ஆர்வம் ஏற்படும். இச்சூழலில் அங்கேயுள்ள ஒரு நூலில் இந்தியா விடுதலை பெற்றபோது, திருவாடுதுறை ஆதீனத்தின் செங்கோல் மெளன்ட்பேட்டனிடம் வழங்கப்பட்டு அதை நேருவிடம் ஒப்படைத்ததாக ஒரு செய்தி இருந்தது.
மௌண்ட்பேட்டன் இந்தியாவிற்கு விடுதலையை தரவிருக்கிறோம். ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுங்கள் என்று நேருவிடம் கூறினார். இங்கிலாந்திலிருந்து இந்தியா சுதந்திரத்தை எப்படி பெறுவது? என்று நேருவுக்கு ஒரே குழப்பம். உடனே இராஜாஜியின் உதவியை நாடினார். இராஜாஜியும், எங்கள் தமிழ் மன்னர்கள் அரசுரிமையை மற்றவர்களுக்குத் தரும்போது அரச குருமார்கள் நாட்டின் செங்கோலை அடுத்து வரும் மன்னணிடம் தந்து ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி கூறுவார்கள்.
அதுபோலவே செய்துவிடலாம் என்றார் நேரு.


கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02/12/2018
No comments:
Post a Comment