Friday, December 21, 2018

நாராயணசாமிநாயுடு.இன்று அவரின் 34 நினைவு நாள்.

வீட்டில் பல ஆண்டுகளாக மின்சாரத்தை பயன்படுத்தாமல் வாழ்ந்து காட்டிய கொள்கைப் போராளி தான் #நாராயணசாமிநாயுடு.இன்று அவரின் 34 நினைவு நாள்.
————————————————
இன்று (21/12/2018) உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 34வது நினைவு தினம்.வழக்கம் போல கோவை மாவட்டம் வையம்பாளையம் கிராமத்தில் புகழஞ்சலி செலுத்தினோம். முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வந்திருந்தனர். நாராயணசாமி நாயுடுவின் பேரன் பிரபு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.



இதே நாளில் 1984இல் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு கோவில்பட்டி பயணியர் விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது மறைந்தார். அப்போது உடன் இருந்தவன், 34 ஆண்டுகள் கடந்துவிட்டது.எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் மின் கட்டணத்தை குறைக்கவேண்டி போராட்டங்கள் நடத்தியும் குறைக்கவில்லை. அதனால் இவரது வையம்பாளையம் வீட்டில் பல ஆண்டுகளாக மின்சாரத்தை பயன்படுத்தாமல் வாழ்ந்து காட்டிய கொள்கைப் போராளி தான் நாராயணசாமி நாயுடு.




#தமிழகவிவசாயசங்கம்
#நாராயணசாமிநாயுடு
 #Ksrposting 
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
21/12/2018


No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...