Friday, December 14, 2018

காங்கிரஸ் பார்வைக்கு ..........

காங்கிரஸ் பார்வைக்கு ..........
————————————————
ராகுல் காந்திக்கு அரசியல் தெரியாது, தெரியாது என்று தொடர்ந்து சொல்லி வந்தனர். இன்றைக்கு காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. வரவிருக்கின்ற 2019 நாடாளுமன்ற தேர்தலில் வலுவான மாநிலக் கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ் என இருப்பது மறைமுகமாகவும், உளவியல் ரீதியான பார்வையும் காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றிக்கு ஒரு அடிப்படையாக இருந்தது. 

இது மட்டுமல்லாமல் மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கை, பணமதிப்பிழப்பு, ஏடிஎம்மில் காத்திருந்தது, பணப்பரிவர்த்தனை போன்ற பிரச்சனைகளில் சாதாரண மக்களையும் அல்லாட வைத்துவிட்டார். 

விவசாயிகளும் வாடி வதங்கினர். அதிகபட்சமாக நிடி ஆயோக்கின் அறிக்கையின்படி சாதாரண விவசாயியின் வருட வருமானமே இருபது ஆயிரம் ரூபாய் தான்.இதை கொண்டு எப்படி ஜுவிக்க முடியும்.
எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின்படி விவசாயிகளின் விளை பொருட்களுக்கு சரியான நியாயமாக விலையில்லை. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். இதையெல்லாம் மோடி பரிசீலிக்கவே இல்லை. 
மகாராஷ்ட்டிராவிலும், டெல்லி விவசாயிகள் தெருக்களிலும் போராடினார்கள். இதையெல்லாம் மோடி பாராமுகமாகவே இருந்தார். 

சட்டீஸ்கரில் பூர்வகுடி, கிராமப்புற மக்களின் வாழ்வைக் கெடுத்து கார்ப்பரேட்களின் ஆதிக்கம் அதிகப்படியாகி நடுத்தர மக்களும், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களும் பாதிக்கப்பட்டனர். 
சட்டீஸ்கரில் சட்ட ஒழுங்கு மீறல் ராஜஸ்தானில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகள் என்ற நிலையில் வேறு வழியில்லாமல் காங்கிரசுக்கு வாக்களித்தனர். 

ராகுலுக்கு 2019 நாடாளுமன்ற தேர்தல் என்ற சவாலை வென்றெடுக்க இந்த 5 மாநிலங்களில் கீழதட்டு மக்களின் கவலைகளையும் போக்கினால், இந்திரா காலத்தில் காங்கிரஸ் கோலோச்சியது மாதிரியான உயரத்தை எட்டலாம்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
14-12-2018

#KSRadhakrishnan_postings
#KSRpostings

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...