Saturday, December 22, 2018

நாராயணசாமிநாயுடு.இன்று அவரின் 34 நினைவு நாள்.

வீட்டில் பல ஆண்டுகளாக மின்சாரத்தை பயன்படுத்தாமல் வாழ்ந்து காட்டிய கொள்கைப் போராளி தான் #நாராயணசாமிநாயுடு.இன்று அவரின் 34 நினைவு நாள்.
————————————————

இதே நாளில் 1984இல் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டு கோவில்பட்டி பயணியர் விடுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது மறைந்தார். அப்போது உடன் இருந்தவன், 34 ஆண்டுகள் கடந்துவிட்டது.எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் மின் கட்டணத்தை குறைக்கவேண்டி போராட்டங்கள் நடத்தியும் குறைக்கவில்லை. அதனால் இவரது வையம்பாளையம் வீட்டில் பல ஆண்டுகளாக மின்சாரத்தை பயன்படுத்தாமல் வாழ்ந்து காட்டிய கொள்கைப் போராளி தான் நாராயணசாமி நாயுடு.












இன்று தமிழகத்தில்  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்படுகிறது  என்றால் அதற்கு காரணம் நாராயணசாமி  நாயுடு அவர்கள் நடத்திய போராட்டங்களும் அவரது தலைமையில் இயங்கிய விவசாய சங்கத்தினர் செய்த உயிர்தியாகங்களும் தான் .
1984ல் சென்னை பொது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது கல்கி இதழ்க்கு பேட்டி கண்டது நினைவில் பசுமையாக இருக்கிறது. கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் தான் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
"வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றிவிட்டார் எம்ஜிஆர் "என்று  பேட்டியில் சொல்லியிருந்தார் நாராயணசாமி நாயுடு.-ப்ரியன்

#தமிழகவிவசாயசங்கம்
#நாராயணசாமிநாயுடு
 #Ksrposting 
#KSRposting
#KSRadhakirushnanpost
கே.எஸ் . இராதாகிருஷ்ணன்
21/12/2018.
கல்கி இதழ் -16/5/1982.


No comments:

Post a Comment

பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…

  பிறந்த பூமியின் மண்வாசனை…. சிறுபிராயத்தில் திரிந்த என் நிலங்கள்.. என் உயிர் போன்ற ஜீவ நேசிப்புகள்…