Monday, December 17, 2018

சில நேரங்களில்... தேடலை விட, தனிமையே அதிகம் அறிவை கொடுத்துவிடுகிறது.!

‘’நீ ஆசைப்பட்டு உழைத்தும்
உனக்கு கிடைக்காமல் தகுதியற்றவர்க்கு கிடைக்கிறது. உன்னால் 
நான் ஜெயித்தேன்.....’’  என்றார் நேற்று ஒரு அன்புக்குரியவர்.



ஒருகாலத்தில் விமர்சனங்களையும் வீண்பேச்சுக்களையும் கண்டு பயந்தவன் ஒதுங்கியோடியவன் வேதனைப்பட்டவன் தான் ஆனால் பின் காலங்களும் கடந்து வந்த பாதைகளும்  எனக்கு துணிவையும் தைரியத்தையும் நிறையவே கற்றுத்தந்திருக்கிறது. பல்கலைக்கழகப்பட்டங்களை தவிர என் வாழ்க்கையில் மேலதிக எந்த முயற்சியும் இதுவரை  இல்லைத்தான் ஆனால் எனது காலங்கள் வீணாகிவிட்டதென்றோ வீணாகிப்போகிறதென்றோ என்றும் கண்கலங்கியவனில்லை ஏனெனில் நான், யாரும்  எளிதில் பெற முடியாத நல்ல மனிதர்களின் அன்பை இந்த சமூகத்தில் சம்பாதித்திருக்கிறேன்  என்ற பெருமிதம் எனக்கு நிறையவே எண்டு. பட்டங்களும் பதவிகளும் ஆளமுடியாத நல்ல உறவுகளின் பக்கங்கள், நூல்கள் என்னிடம் நிறையவே உண்டு அதுபோதும் எனக்கு. எனது முயற்சிகளும் பயிற்சிகளும் இந்தமண்ணுக்கு......

வாழ்வின் சில உன்னதமான தருணங்கள் நம்மை அறியாமல் அரங்கேறும்...

#KSRadhakrishnanpostings
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
17-12-2018.

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...