Thursday, September 2, 2021

#கிரா_விருது_பெற்ற_கோணங்கி ———————————————————

 #கிரா_விருது_பெற்ற_கோணங்கி

———————————————————
கிரா விருது பெற்ற கோணங்கி இன்றைக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அவர் கோவில்பட்டியாக இருந்தாலும் இரண்டு, மூன்று தடவைதான் சந்தித்ததுண்டு. இதுவரை அவருடன் நேரடியாகவோ, தொலைபேசியிலோ பேசியதில்லை.
கடந்த 1989-ல் சட்டமன்ற தேர்தலில் நான் கோவில்பட்டியில் திமுக வேட்பளராக போட்டியிட்ட போது; இடைசெவல் கிராமத்திற்கு கிராவைச் சந்திக்கச் சென்ற சமயத்தில் கோணங்கியை பற்றி கிரா சிலாகித்தார். இது நடந்தது கிரா புதுவைக்கு வருவதற்கு முன்பு. எனக்கு அப்படிதான் கோணங்கியைப் பற்றிய அறிமுகம்.
அவருடைய மூத்த சகோதரர் தமிழ்ச்செல்வன் என்னோடு தொடர்பில் இருந்தவர். இவர்களின் பூர்வீகம் சாத்தூர் நென்மேனி மேட்டுப்பட்டி இருந்தாலும் கோவில்பட்டியிலிருந்தே இயங்கிக்கொண்டு இருந்தார்கள். அப்போது கோவில் பட்டியில் பல படைப்பாளிகள் வலம் வந்தநேரம். இன்றைக்கு கோணங்கி, கரிசல் இலக்கிய படைப்புகள், தான் எழுதிய படைப்புகள் குறித்தான விடயங்கள், இனி தான்படைக்கப் போகின்றப் படைப்புகளைக் குறித்து விரிவாக பேசினார்.இது மகிழ்ச்சியானத் தருணமாக அமைந்தது.
கோணங்கியின் படைப்புகள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யவேண்டும் என்று என்னுடைய கருத்தை அவரிடம் கூறினேன். கோணங்கி எளிமையான வாழ்க்கை, தேடல், வாசிப்பு, ஆழமானப்புரிதல், அற்புதமான சொல்லாடல் என பல சிறப்புகளையும், மேன்மைகளையும் தன்னகத்தே கொண்டவர்.
சமகாலத்தில் படைப்பாளிகளுக்கு ஒரு இலக்கணமாக திகழ்கின்றார் கோணங்கி அவர்கள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
01.09.2021

#புலித்தேவன் ————————

 #புலித்தேவன்

————————
இமயம் வரை கொடி நாட்டிய பாண்டி மன்னர்கள் இருந்தார்கள், மிக பெரிய படையெல்லாம் வென்று கங்கையினை அடைந்த பாண்டிய மன்னர்களும் மதுரையில் இருந்தார்கள்
பாண்டியரின் எதிரிகள் என சோழதேசமே அறியபட்டது, கரிகால் கோழன் காலத்தில் இருந்து ஆதித்த கரிகாலன் காலம் வரை அந்த பகை தொடர்ந்தது, மதுரையில் பாண்டியன் தலையினை ஆதித்த கரிகாலன் வெட்டியதற்கு சேரனோடு சேர்ந்து ஆதித்த கரிகாலன் தலையினை வெட்டி பழிதீர்த்தது பாண்டிய இனம்
ஆனால் ராஜராஜ சோழனும் அவன் மகன் ராஜேந்திரனும் பாண்டியர்களை இரு தலைமுறைகளாக அடக்கி வைத்த காலத்தில் சிங்கமென எழும்பி சோழரை சேரரை அடக்கி மிகபெரிய சாம்ராஜ்யம் அமைத்தான் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்
அவன் ஆட்சியில் இந்திய கண்டத்தில் அவனே சக்கரரவர்த்தி
ஆனால் அவனின் 4ம் தலைமுறையின் வாரிசு சண்டையில் வீரபாண்டியன் ஆட்சி உரிமைக்காக அலாவுதீன் கில்ஜி உதவியினை நாடியதுதான் மாபெரும் தவறு
பாரத மன்னர்களிடையே இந்த உதவி இருந்தது, அறம் இருந்தது ஆனால் அறமற்ற ஆப்கானியரிடம் அதெல்லாம் இல்லை என்பதை வீரபாண்டியன் உணர பெரும் விலை கொடுக்க நேர்ந்தது
கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் பாண்டிய நாட்டை சூறையாடினான், தஞ்சையும் பாண்டியர்களிடம் அந்நாளில் இருந்ததால் அதையும் அழித்து போட்டான், தஞ்சை பெரியகோவிலின் தங்க தகடெல்லாம் அப்பொழுதுதான் கொள்ளை அடிக்கபட்டன‌
ஆனாலும் ஆங்காங்கே சிதறிய பாண்டியர்களை ஒருங்கிணைத்து மாலிக்காபூரை விரட்டினார் பராக்கிரம பாண்டியன்
அதன் பின் மதுரை நிலமை சீரானாலும் வெறிகொண்ட மிருகமாக வந்தான் முகமது பின் துக்ளக், அவனின் காட்டுதனமான போரில் பாண்டியர்கள் ராமநாதபுரம் பக்கம் தென்காசி வள்ளியூ களக்காடு என விரட்டபட்டபட்டனர்
பின் இந்த ஆப்கானிய ஆட்சியினை நாயக்க மன்னர்கள் மதுரைக்கு வந்து விரட்டி அமர்ந்தபொழுது பாண்டியர்கள் அதே நிலையில் நீடித்தனர்
நாயக்கர்களின் 200 ஆண்டுகால ஆட்சிக்கு பின் அவுரங்கசீப்பின் கரங்கள் தென்னகத்தை ஆண்டது, அந்த கரங்களில் ஆற்காடு நவாப்
அந்த நவாப் வீட்டின் உள்சண்டையில் தலையிட்டுத்தான் ஆங்கிலேயர் ஆட்சியினை அமைக்க வழி செய்தான் ராபர்ட் கிளைவ், அவன் நவாபின் பிரதியாக தென்னகத்தை ஆண்ட காலம்
இந்த காலத்தில் புலித்தேவன் எனும் பாண்டிய வாரிசு நெல்லை மாவட்டம் வாசுதேவ நல்லூரில் ஆட்சி செய்து கொண்டிருந்தார், அவர் நாயக்கருக்கோ நவாபுக்கோ கட்டுபட்டவர் அல்ல‌
வாசுதேவநல்லூர் அவனின் கோட்டை, நெல்கட்டும் ஜமீன் பாண்டிய அரசின் எச்சம்
ஆற்காடு நவாபிற்கு தலைவலியான பூலிதேவன் வெள்ளையனுக்கும் சவால் விட்டான்,அவன் வாழ்வை நோக்கினால் பல ஆழமான விஷயங்களை காண முடியும்
முதன் முதலில் வெள்ளையனை எதிர்த்தவன் அவனே, அவனுக்கு பின் நெடுங்காலம் கழித்தே கட்டபொம்மன் எதிர்த்த்தான்
சுதந்திர போரினை இத்தேசத்தில் தொடங்கிய முதல் வீரன் புலித்தேவன் என்பதில் சந்தேகமில்லை
மிக வீரமான போரினை நடத்தினான் புலித்தேவன், வெள்ளையர் திகைத்தனர், கிளைவ் வங்கபக்கம் இருந்ததால் வரமுடியவில்லை
மருதநாயகமே அவனை , அதனால்தான் சாகிப் என்றிருந்த அவன் பெயர் தலைவன் சாகிப் என கான் சாகிப் ஆனது
முதலில் எளிதாக அடக்கிவிடலாம் என வந்த ஆங்கிலேய படையினை ஓட விரட்டினான் புலித்தேவன், உண்மையில் அவன் புலி என கண்டுகொண்டனர் வெள்ளையர்
புலித்தேவன் அசரவில்லை களக்காடு கோட்டை, ஶ்ரீவில்லிபுத்தூர் கோட்டை என தொடர்ந்து பிடித்து அசத்தினான்.
வெள்ளையர் அவனை தொட முடியவில்லை பின் வாங்கினர்
இனி நெல்லையினை பிடித்து தன் அரசை விரிவுபடுத்தி வலுவானதாக ஆக்க திட்டமிட்டான் புலித்தேவன்
உண்மையில் அவன் பழைய பாண்டிய மன்னரின் சாம்ராயத்தை அமைக்க விரும்பினான், நெல்லையினை தொடர்ந்து மதுரையினை கைபற்றி தமிழ் மன்னனாக நிலைக்கும் திட்டம் அவனிடம் இருந்தது
அதற்கான தகுதியும் இருந்தது
ஆனால் மருதநாயகத்தின் அபார போர்முறை, வெள்ளை தளபதி ஹெரோன் என்பவரின் வஞ்சகம் எல்லாம் அவருக்கு எதிராக மாறிற்று
உண்மையில் நவாபின் சகோதரன் ஒருவனை யுத்த கைதியாக பிடித்தான் புலித்தேவன், அவன் உள்ளிருந்தே கருவருக்கும் வேலையினை செய்தான்
அவனிடம் கருணை காட்டியதே புலிதேவனுக்கு அபாயமாயிற்று.
அவனை நம்பியதே புலித்தேவனின் வீழ்ச்சி, பல கோட்டைகளை வைத்திருந்த புலித்தேவன் ஒவ்வொன்றாக இழந்து, மருதநாயகத்தால் கைது செய்யபட்டான்
அவனை தூக்கிலிடும் முடிவில் மருதநாயகம் இழுத்து வர, ஒரு ஆலயத்தின் உள்ளே சென்று வணங்க உத்தரவு கேட்ட பூலித்தேவன் அப்படியே மாயமானான்
உள்ளிருந்த சுரங்கம் வழியே தப்பினான் இல்லை வெறு வழியில் தப்பினான் என ஏக தகவல்கள்
ஆனால் அவன் வெள்ளையர் கையால் கொல்லபடவில்லை என்பது உண்மை
அவன் மீண்டு வந்து கோட்டையினை ஆள கூடாது என்பதற்காக அவன் கோட்டையினை அழித்தான் மருதநாயகம்
ஒரு விஷயம் சொல்ல வேண்டும்
முதன் முதலில் வெள்ளையனை எதிர்த்தவன் அவனே, அவனுக்கு பின் நெடுங்காலம் கழித்தே கட்டபொம்மன் எதிர்த்த்தான்
சுதந்திர போரினை இத்தேசத்தில் தொடங்கிய முதல் வீரன் புலித்தேவன் என்பதில் சந்தேகமில்லை
மிக வீரமான போரினை நடத்தினான் புலித்தேவன், வெள்ளையர் திகைத்தனர், கிளைவ் வங்கபக்கம் இருந்ததால் வரமுடியவில்லை
மருதநாயகமே அவனை வென்றான், அதனால்தான் சாகிப் என்றிருந்த அவன் பெயர் தலைவன் சாகிப் என கான் சாகிப் ஆனது
புலிதேவனின் வீரப்போர் பின்னாளில் பெரும்போர் நிகழ்த்திய திப்பு சுல்தானுக்கு முன்னோடி போர், அவனின் வீரம் அத்தகையது வெற்றிபெற்றதும் அப்படியானது
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரன் என வரலாறு அவனைத்தான் காட்டுகின்றது
அந்த மாவீரனின் பிறந்த நாள் இன்று,
ஒண்டிவீரன், வென்னிகாலடி போன்ற மாபெரும் வீரர்கள் இருந்திருக்கின்றார்கள் அவர்கள் தளபதிகள்
அந்த நவாபின் சகோதரன் புலித்தேவனுடம் இருந்த காலங்களில் அவன் தொழுகை நடத்த தனி மசூதியே கட்டி கொடுத்திருக்கின்றான் புலித்தேவன், அவன் மனது அப்படி இருந்திருக்கின்றது.
அந்த மாவீரனுக்கு வீரவணக்கம் செலுத்துவதில் நாடு பெருமை அடைகின்றது

#இப்படி ஒரு செய்தி தீக்கதிர் ஏட்டில் (31-8-2021/ 8 பக்கத்தில்) வெளிவந்துள்ளது. இது உண்மையா

 இப்படி ஒரு செய்தி தீக்கதிர் ஏட்டில் (31-8-2021/ 8 பக்கத்தில்) வெளிவந்துள்ளது. இது உண்மையா…?

1-9-2021


Wednesday, September 1, 2021

#கிராவிருது_2021_ஏன்_கோணங்கிக்கு_?

 #கிராவிருது_2021_ஏன்_கோணங்கிக்கு_?

கோணங்கி தமிழின் தனித்துவமான ஒரு எழுத்துக் கலைஞர்
--------------------------------------
கிரா எழுத்தில் எளிமையைப் பின்பற்றியவர். வாசக சுவாரஸ்யம் அவருக்கு முக்கியம். அவர் ஒரு கதை சொல்லி. அதுதான் அவரது சிறப்பு.
கிரா எழுத்தில் எளிமையைப் பின்பற்றியவர். வாசக சுவாரஸ்யம் அவருக்கு முக்கியம். அவர் ஒரு கதை சொல்லி. அதுதான் அவரது சிறப்பு.
உண்மையில் கோணங்கியினுடைய நாவல்கள் கடினமானதுதான். அவரது நாவல்களில் கதையிருப்பதில்லை. சம்பவங்கள்தான் உண்டு. அந்தச் சம்பவங்களைக்கூட வாக்கியங்களால் புதிராகவே அமைத்திருப்பார். வாசிக்கும்போது உடன்நிகழ்வாக நமக்குத் தோன்றும் அம்சங்கள்தான் கதையாக உருப்பெறும். அல்லது நாமே ஊகிக்க வேண்டிவரும். ஒரு வனத்திற்குள் நுழைவதைப்போன்றது. அதற்குள் நுழைந்த அனுபவங்களைக் கதையாகச் சொல்வதில்லை. ஆனால், வனத்திற்குள் நுழையும்போது ஏற்படும் மனநிலையைப் போன்று நேரடி தருணங்களை உணரச் செய்பவை.
நாவல் என்றால் அதில் ஒரு கதை இருக்க வேண்டும். அல்லது கதையப்பற்றிய ஒரு கதையாவது இருக்க வேண்டும் எனக் காலங்காலமாக நம்பும் எழுத்து மரபில் அவருடைய நாவல்கள்பற்றிய மதிப்பீடு என்பது, வாசிக்க முடியாதது. புரியாதது என துாரத்தில் துாக்கி எறிந்துவிடக்கூடியவைதான்.
அவரின் நாவல்கள் அனுபவப்பதிவுகளாகவோ, அல்லது அதன் கதைகளாகவோ இருப்பதில்லை. எந்த ஒருவரின் மனதிலும் தங்கியிருந்து தொந்தரவு செய்வதுமில்லை. வாசிக்கும்போது அந்த வாக்கியங்களும் அதனுாடாக உருவாகும் உணர்வுகளும் தோன்றுகின்றன. வாசித்தபிறகு மறைந்துவிடுகின்றன. உண்மையில் வாசிப்பு இன்பத்தை அந்தக் கணங்களில் உருவாக்கிவிடுகின்றன. கணங்களின் மறைவான பாதைவழியே மனதையும் நமது கற்பனையையும் அழைத்துச் செல்பவை.
ஆற்றில் குளிக்கும்போது ஏற்படும் உணர்வு, காலைப்பொழுதை காணும்போது ஏற்படும் உணர்வு இப்படி, தருணங்களில் வசிக்கச் செய்பவை. சம்பவங்களை இணைத்து ஒரு கதையாக உருவாகி நிற்பதில்லை. காட்சிகளைக் காணும்போது ஏற்படும் உடனிகழ்வுகள் பிரவாகித்து ஏற்படுத்தும் பரவசம் போன்றவை. பிறநாவல்களைப் போல, குறித்த காட்சிகளைக் கண்டபிறகும் கதைகளாக மனங்களில் பின்தொடரும் வேலையைச் செய்வதில்லை. ஆனால், அந்தக் கணநேர அனுபவம், சம்பவங்களின் பரவசம் என்ற ஒன்று இருந்ததே என்ற எண்ணத்தை மாத்திரமே நம்மைப் பின்தொடரச் செய்பவை.
சம்பவங்களைக் கதைகளாக மாற்றிச் சிந்திக்கும் இரண்டாம் கட்ட வேலையைக் கோணங்கியின் நாவல்கள் செய்வதில்லை என்பதால்,
அவரின் நாவல்களைப் புறக்கணித்துவிட முடியாது. ஏதோ ஒன்றை அனுபவித்தோம் என்ற உணர்வை மனம் முழுக்க தக்கவைக்கும் ஆற்றல் அவரின் நாவலுக்கு மாத்திரமே உண்டு. அந்த வகையில் தமிழில் தனித்துவமானதும், போட்டிகளற்றதுமான ஒரு எழுத்தாளர்.
ஆனால், என்ன கதைகளும் அதைத் தொடரும் சிந்தனைகளையும் எதிர்பார்க்கும் இலக்கி வெளியில் அவரைப் புறக்கணிப்பது இலகுவானது என்ற தோரணையில் பலரும் பதிவிடுவதை காணமுடிகிறது. வாசிப்பு இன்பத்தைத் தருவது என்பதுதான் இலக்கியத்தின் முதல் பணியென எடுத்துக்கொண்டால் அதைச் செய்வதற்கு கோணங்கியின் நாவல்களைவிட வேறு எந்த நாவல்களாலும் முடியாது.
புரிந்துகொள்ளக்கூடியதாக இருப்பவை மாத்திரமே இந்த உலகத்தில் முக்கியமானவை என்ற தவறான மதிப்பீடுகளும் இதற்குப் பின்னே உள்ளன. புரிந்துகொள்ள முடியாத பல அம்சங்கள் அனுபவப் பரவசங்களை ஏற்படுத்துபவைாயகவும் உள்ளன. அதுபோல், புரிந்துகொள்ள முடிபவைகளாகச் சொல்லப்படுபவைகளும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட்டவைகளல்ல. புரிந்துகொள்ளுதல் என்பது மனிதச் செயற்பாடுகளில் ஒன்று. அதற்கு அதீதமான முக்கியத்துவத்தை வழங்க வேண்டியதில்லை. அதேநேரம், புரிந்துகொள்ளும் முயற்சியில் பங்களிப்பு செய்பவர்களெ அனைவரும்.
கோணங்கி தமிழின் தனித்துவமான ஒரு எழுத்தாளர். அவர் மொழியைப் பயன்படுத்தி, இசையையும், காட்சிகளையும் பிறப்பிப்பவர். இசையையும், காட்சிகளையும் நாம் எப்படி உடன்நிகழ்வாக உட்பொருளாக நமக்குள் பரவச் செய்கிறோமோ அப்படியான ஒன்றை மொழியைப் பயன்படுத்து செய்பவர். இசையையும், காட்சிகளையும் முதல் பார்வையிலும், முதல் கேட்டலிலும் உள்ளார்ந்தரீதியாக நெருங்கிக்கொள்கிறோமோ அதைப்போலதான் கோணங்கியின் நாவல்களையும் நாம் நெருங்க முடியும். புரிந்துகொள்வதற்கான உள்ளீடுகளைக் குறைத்து, உணர்ந்துகொள்ளும் தரிசனத்தை அதிகம் அக்கறை கொள்பவை கோணங்கியின் எழுத்துக்கள்.
நீர்வீழ்ச்சியை காணும்போது ஏற்படும் உணர்வுகளைப் போல, இசையைக் கேட்கும்போது ஏற்படும் ஊடுருவல் போல, வாசிக்கும்போது மாத்திரமே உருவாகி மறைந்துவிடுவன. வாசகர்களைப் பின்தொடர்ந்து வந்து தொல்லைப்படுத்துவதில்லை.

#வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை..!! வந்தது எதுவும் சொல்லி போவதில்லை..!!

 வாழ்க்கையில் எதுவும் சொல்லிவிட்டு வருவதில்லை..!! வந்தது எதுவும் சொல்லி போவதில்லை..!!



#Food_items_of_India

 #Food_items_of_India

31-8-2021.

#Beware; for i am fearless,


 #KSRposting

01.09.2021

Yes… brutal killings

  Yes… brutal killings Quote Rishi Bagree @rishibagree · Aug 20 ”India lost 15000 citizens in Sri Lanka because of Rajiv Gandhi.” Reveals h...