Tuesday, August 2, 2016

சாமக்கோழி கூவும் நேரம்

சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும் .....என கிராமங்களில் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்களும், அதிகாலையில் காட்டு வேலைக்கு செல்பவர்களும் சாமக்கோழி கூவும் நேரத்தை பயன்படுத்துகின்றனர்.
கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை, கிராமப்புறம் மட்டுமின்றி நகர்ப்புறங்களிலும் மனிதர்கள் விழித்தெழ கோழி கூவும் சத்தம் மிகுந்த உதவியாக இருந்துள்ளது. #சாமக்கோழி கூவும் நேரம் ஏறத்தாழ அதிகாலை 3 மணியில் இருந்து 3.30 மணிக்குள் இருக்கும். இதற்கு அடுத்ததாக சேவல் காலை  5 மணிக்கு தொடந்து கூவும். பெட்டைக் கோழி கூவாது
மரபுப்படி கோழி என்பது சேவல், பெட்டை என்ற இரண்டு இனங்களையும் குறிக்கும். அதனால்தான் கோழி கூவுது என்ற சொல் வழக்கத்தில் வந்தது.                      சேவல் கூவுகிறது என்று தனிமைப்படுத்தி கூற வேண்டிய அவசியம் இல்லை.

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...