———————————————————-
பல கிராமங்களில் நேர்மையாகவும் நன்றாகவும் வாழ்ந்த குடும்பங்கள் சில
வற்றைப்இப்போதுபார்க்கும்பொழுது
வேதனைப்படுத்துகிறது, அப்படி வாழ்ந்த குடும்பங்கள் பலருக்கும் பல வகையில் தாராளமாக உதவியும் உள்ளனர். இப்படிப்பட்டக் குடும்பங்களின் உதவியால் படித்தவர்கள் அப்போது ஒன்றுபட்ட நெல்லை, ராமநாதபுர மாவட்டங்களிலிருந்து ஆசிரியர் பணிக்கு சென்று ஒன்றுபட்ட சேலத்தில் ஆசிரியர்களாக இருந்து பலர் ஓய்வுப் பெற்றனர்.
அப்படி, ஆசிரியர் பணி முடிந்து ஓய்வுப் பெற்ற எங்கள் பகுதி சேர்ந்த ஒருவர் என்னை இன்று சந்தித்தார். அவர் உதவிப் பெற்றக் குடும்பத்தைப் பற்றி அவர் வேதனைப்பட்டது எனக்கும் சற்றுக் கவலையுறச் செய்தது. நன்றாக, நல்லவழியில் வாழ்ந்த குடும்பம் இன்று வறுமையில் வாடுகின்றது. கலகலவென்று இருந்த, வாழ்ந்த வீடுகள் இன்று முட்டுச்சுவர்களால்இருப்பதுதான் இயற்கையின் நீதியா..?.

No comments:
Post a Comment