Wednesday, February 10, 2021

#காருக்குருச்சி_அருணாசலம்_நூற்றாண்டு...


———————————————————
சென்னையில் 1960 ல் நடந்த திருமணத்தில்.....
சிவாஜி கணேசனும்,ஜெமினியும் கணேசனும் வந்தபோது , அங்கே காருக்குருச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர வாசிப்புநடந்து அங்கே கொண்டிருந்தது...
இருவருக்கும் காருக்குரிச்சியின் நிகழ்ச்சி என்றால் ஆர்வம்.அங்கே அமர்ந்து இசையை ரசித்தார்கள்.
கச்சேரி இறுதியில் " அண்ணே அண்ணே நாதஸ்வரத்தக் குடுங்ஙண்ணே " என்று சிவாஜி கணேசனும் ஜெமினி கணேசனும் வாங்கிக் கொண்டு இருவரும் இசை வானர்கள் போல் படம் எடுத்த போது....
உடன் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் மற்றும் காருக்குரிச்சி.
கொஞ்சும் சலங்கையில் ஜெமினி நாதஸ்வரத்தைப் பாத்திரத்துக்கு வாசிக்க அவருக்கு காருக்குறிச்சி நாதஸ்வரம் வாசித்தார்.

இதன் பின்,கொஞ்சும் சலங்கையும் தில்லானா மோகனாம்பாளும் திரைப்படங்கள் பல ஆண்டுகளுக்கு பின் வெளி வந்தது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனை அருகே காருக்குருச்சி சிலையை ஜெமினி கணேசனும் சாவித்திரியும் தங்கள் சொந்த செலவில் அமைத்தனர்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
KSR_Post
06.02.2021

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்