Wednesday, February 10, 2021

#ஸ்ரீவில்லிப்புத்தூர்_மேகமலை_புலிகள்_சரணாலயமாக_மாற்றம்


———————————————————-
ஸ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை வனப்பகுதிகளை புலிகள் சரணாலயமாக மாற்ற மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது தமிழகத்தில் ஐந்தாம் புலிகள் சரணாலயமாகவும், இந்தியாவின் 51-வது புலிகள் சரணாலயமாகவும் ஸ்ரீவில்லிப்புத்தூர், மேகமலை சரணாலயங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் ஹெக்டேர் பகுதி, 63 வகையான பாலூட்டிகள், 323 வகை பறவையினங்கள் பாதுகாக்கப்படும்.

கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு அருணாச்சலப்பிரதேசத்தின் காம்லாங் பகுதி புலிகள் சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07.02.2021

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...