———————————————————-
இராமநாதபுரத்தில், 1878 ஜூலை, 26-ல் பிறந்தவர் மு.ராகவையங்கார். ராமநாதபுரம் சமஸ்தான புலவராக இருந்த தன் தந்தையிடமே, கல்வி பயின்றார்.
சென்னை பல்கலை தமிழ்ப் பேரகராதி தயாரிப்புக் குழுவின் தலைவராகச் செயல்பட்டு, அதற்கு இறுதி வடிவம் கொடுத்தார். சுவடி, கல்வெட்டு, பண்டைய இலக்கண – இலக்கிய உரை ஆகியவற்றில் காணப்பட்ட பழஞ்செய்யுள்களை முழுமையாகத் தொகுத்து, இவர் உருவாக்கிய, ‘பெருந்தொகை நூல்’ முக்கியமானது.
திருவனந்தபுரம் பல்கலை தமிழ் ஆராய்ச்சி துறை தலைவராகவும், சென்னை லயோலா கல்லூரியில் சிறிது காலம் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1960 பிப்ரவரி 2-ல் தன் 82-வது வயதில் மறைந்தார். முதுபெரும் புலவர் மு.ராகவையங்கார் காலமான தினம் இன்று.

No comments:
Post a Comment