Wednesday, May 3, 2023

#மக்கள்தொகையில் உலகில் இந்தியா முதலிடம்



—————————————
மக்கள் தொகையில் உலகில் முதலிடம் 
மக்கள்தொகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி  இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐ.நா. மக்கள்தொகை நிதியத்தின் (யுஎன்எஃப்பிஏ) உலக மக்கள்தொகை அறிக்கை  -2023 அண்மையில் வெளியானது. அதில் உலக மக்கள் தொகையில் இந்தியா 142.86 கோடி மக்கள்தொகையுடன் முதலிடத்திலும், சீனா 142.57 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது தெரிய வந்துள்ளது.கடந்த  200 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள்தொகையில் சீனா முதலிடத்தில் இருந்து வந்தது. 
இந்திய மக்கள்தொகையில் 14 வயது வரை 25 சதவீதம் பேரும், 15 முதல் 64 வயது வரை 68 சதவீதம் பேரும், 65 வயதுக்கு  மேற்பட்டவர்கள் 7 சதவீதம் பேரும் இருப்பதும் தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேசத்தின் மக்கள்தொகையையே கொண்ட பாகிஸ்தானும் (சுமார் 23.14 கோடி), தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் தோராயமாக மூன்றில் ஒரு பங்கையே கொண்ட இலங்கையும் (2.2 கோடி) பொருளாதாரரீதியாக மிகப் பெரும் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளன. கரோனா பெருந்தொற்றின் பாதிப்பு, உக்ரைன் -ரஷியா இடையேயான போர் போன்றவற்றின் காரணமாக, தமிழ்நாட்டின்  அளவுக்குக் கூட மக்கள்தொகை இல்லாத பல நாடுகள் பொருளாதாரரீதியாக கடும் சவாலை எதிர்கொண்டு திண்டாடிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில், 

கரோனாவுக்கு  தடுப்பூசி கண்டுபிடித்து  உலக நாடுகளுக்குக் கொடுத்ததுடன் 80 கோடிக்கும் அதிகமானோருக்கு  25 மாதங்களுக்கும் மேலாக 5 கிலோ உணவு தானியத்தைத் மத்திய அரசு இலவசமாகக் கொடுத்துள்ளது.
   நமது நாட்டில் 2020- 21 ஆம்   ஆண்டில் சாதனை அளவாக 109.59 மில்லியன் டன் கோதுமை உற்பத்தித் செய்யப்பட்டுள்ளது.
  2021-22 இல் வெப்ப அலை போன்றவற்றால் 106.84 மில்லியன் டன்னாக அது குறைந்தது.
  பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 183.96 மில்லியன் டன் பால் உற்பத்தித் செய்யப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை விட 50 சதவீதம் அதிகம். சீனாவைவிட 3 மடங்கு அதிகம். ரூ.2,928 கோடி மதிப்பிலான 1.08 லட்சம் டன் பால் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று பல துறைகளிலும் இந்தியா சாதனை படைத்து வரும் நிலையில், இன்று மக்கள்தொகை பெருக்கத்திலும் சாதனை படைத்துவிட்டது. 

மத்திய அரசு சாலைகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை  மேம்படுத்துவதற்கான மூலதனச் செலவுகளுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 20 சதவீதம் ஒதுக்கியுள்ளது. 
  அண்மையில் மேம்படுத்தப்பட்ட சென்னை சர்வ தேச விமான நிலையம் போன்று நாடு முழுவதும் விமான நிலையங்களும், துறைமுகங்களும் நவீனமயமாக்கப்படுகின்றன. 
  சர்வதேச தரத்தில் நெடுந்தொலைவு சாலைகள் அமைக்கப்படுகின்றன. 
  இணையம் மூலம் பெரும்பாலான சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் கூட இணையப் பரிவர்த்தனை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. 
  மத்திய அரசு ஊக்கம் அளித்ததன் காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் உருவாகி உள்ளன. 
வளர்ந்த தேசமாக இந்தியா மாற வேண்டுமெனில், சமூக -பொருளாதார, சுகாதார, அரசியல் சூழ்நிலைகள் அதற்கு சாதகமானதாக இருக்க வேண்டும்.
    நாடு முழுவதும், கடுமையாக உழைக்கக் கூடிய பருவமான 15  வயது முதல் 24 வயது வரை 25.4 கோடி பேர் உள்ளனர்.  இவர்கள் திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.  அப்போதுதான் உலகின் தொழில்கூடமாக இந்தியா மாற முடியும்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். அளவுக்கதிகமான பிள்ளைகளைப் பெற்றால் அரசுப் பணியில் பதவி உயர்வு, அரசு மானியங்கள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடையாது உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஆகியோர் மக்களை தொகையைக் கட்டுப்படுத்த உரிய சட்டங்களைக் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே அளவுக்கதிகமாக பிள்ளைகளைப் பெற்றால் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற  வரைவு மசோதா  வாஜ்பாய் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் ஏனோ அது நிறுத்தப்பட்டது.

#மக்கள்தொகையில்_உலகில்_இந்தியா_முதலிடம்
#Poplation of India 


140.76 crores (2021)
19601980200020201.5B1.0B0.5B0


#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
3-5-2023.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...