Friday, May 12, 2023

அழகே வா…….அருகே வா அலையே வா…… தலைவா வா…… அழகே வா வா வா அழகே வா ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே

அழகே வா…….அருகே வா
அலையே வா…… தலைவா வா……
அழகே வா வா வா அழகே வா
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே
மின்னுது இங்கே

ஒரு கேள்வியை
உன்னிடம் கேட்டுவிட்டேன்
நான் கேட்டதை
எங்கே போட்டுவிட்டாய்
என்ன தேடுகின்றாய்
எங்கே ஓடுகின்றாய்
உந்தன் தேவைகளை
ஏன் மூடுகின்றாய்
உந்தன் தேவைகளை
ஏன் மூடுகின்றாய்

இன்ப ஆற்றினில்
ஓடம் ஓடிவரும்
அந்த ஓடத்தில் உலகம்
கூடி வரும்
நம் முன்னவர்கள் வெறும்
முனிவரில்லை
அவர் தனித்திருந்தால்
நாம் பிறப்பதில்லை
அவர் தனித்திருந்தால்
நாம் பிறப்பதில்லை

ஒரு மொழி அறியாத
பறவைகளும்
இன்ப வழியறியும்
இந்த உறவறியும்

இரு விழியிருந்தும்
நல்ல மொழியிருந்தும்
இங்கு வழியிருந்தும்
ஏன் மயங்குகிறாய்
இங்கு வழியிருந்தும்
ஏன் மயங்குகிறாய்…….

#ஆண்டவன்_கட்டளை |Aandavan Kattalai 
கவிஞர் கண்ணதாசன்|  ரேடியோவில்
இன்று இரவு -8.30/12-5-2023.

No comments:

Post a Comment

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி

  #இரும்புக்கால_புதைவிடப்பகுதி மற்றும் வரலாற்றுப்பகுதி இடம்: #பாட்டத்தூர் (9°09'35.9"N 77°33'31.5"E) மாவட்டம் :தென்காசி ...