Saturday, July 20, 2024

#நாடாளுமன்றத்மக்களவைதலைவர்

 



——————————————————-
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவிக்குக் கடந்த காலத்தில் போட்டி இல்லாமல் இருந்தது என்ற செய்தி தவறானது! பின்
நினைவுக்கு வந்தது.
கடந்த 1952 1967 1976 களில் நாடாளுமன்றத் மக்களவை தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டிகள் நடந்திருக்கின்றன என்பதைக் கடந்த கால ஆவணங்களைப் பார்க்கும்போது தெரிய வருகிறது.
நேரு பிரதமராக இருந்த முதல் நிகழ்விலும் இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த மூன்றாவது நிகழ்விலும் எதிர்க்கட்சிகள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் 55 மற்றும் 58 அளவிற்கே குறைவான வாக்குகள் பெற்று தோற்று இருக்கிறார்கள்.
இரண்டாவது நிகழ்வில் இந்திரா காந்தி காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட சஞ்சீவி ரெட்டி 278 வாக்குகள் பெற்று இருந்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தென்னட்டி விஸ்வநாதன் 207 வாக்குகள் மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார். அது போன்றதொரு நிலையை இன்றைய நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எதிர்பார்த்தது! ஆனால் அவர்களுக்கான வாக்கு எண்ணிக்கை சாதகமாக இல்லை!
ஆகவே பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரே ஓம் பிர்லா பாராளுமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு
இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்!


No comments:

Post a Comment

Water Crisis..

Water Crisis Threatening World Food Production – Report channelstv.com/2024/10/17/wat… நீரின்றி அமையாது உலகு..    எல்லா காலத்துலயுமே தண்ணீர்...