கரிசல் மண்ணில் கனகா பாலன் எனும் பெண் கவிஞர் மிகச் சிறப்பாக நவீன கவிதைத் துறையில் இயங்கி வருகிறார்! எங்கள் கதைசொல்லி குழுவில் இடம் பெறுகிறார். மகிழ்ச்சி…
என் தாய்யார் பிறந்த கிராமமான என் கிராமம் அருகே உள்ள வெள்ளாகுளத்தில் பிறந்து தன் கணவர் பாலன் உடன் சென்னையில் குடியேறி இருக்கிறார். கணவர் பாலன் சென்னையில் ஒரு மளிகை கடை நடத்தி வருகிறார். கனகா பாலன் என்னைத் தொடர்பு கொண்டு பேசும்போது தான் எனக்குத் தெரிந்தது அவர் நமது கரிசல் மண்ணில் பிறந்த படைப்பாளி என்பது.
இளம் படைப்பாளராகிய அவர் இதுவரை நான்கு தொகுப்புகளை தனது படைப்புத்திறனுடன் அருமையாகக் கொண்டு வந்துள்ளார்.
கவனத்தை ஈர்க்கும் படியான அவரின் கவிதைகள் தான் பிறந்த மண்ணின் வாசனையோடும் சமூக உணர்வோடும் அவற்றின் அழகியலோடும் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. அவர் இலக்கியத்தில் இன்னும் எழுதிச் சிறந்த முறையில் பணிகள் ஆற்ற எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Kanaga Balan
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
10-8-2024.
No comments:
Post a Comment