Friday, January 10, 2025

“கனடாவில் வசிக்கும் வெள்ளையின மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! -கனடாவில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதிகள்

 . “கனடாவில் வசிக்கும் வெள்ளையின மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! -கனடாவில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதிகள்

———————————————————
ஏற்கனவே நான் எழுதியும் பேசியும் வருவது போல இந்த கனடா விவகாரம் பெரும்பூதாகரமாக மாறிக் கொண்டிருக்கிறது!
நான்கு கோடி மக்கள் தொகை கொண்ட கனடாவில் 20 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் 7.71 லட்சம் பேர் சீக்கியர்கள்.
கனடாவின் டொரண்டா மாகாணத்துக்கு உட்பட்ட கிராம்டன் நகரில் உள்ள இந்து சபா கோயில் வளாகத்தில் அண்மையில் இந்திய தூதரகம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது அப்போது காலிஸ்தான் தீவிரவாதிகள் கோயில் மீதும் பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள்.
ஜனாதிபதி ட்ருடோ காலிஸ்தான் தீவிரவாதியான நிஜ்ஜார் கொலையில் இந்திய தூதரகத்திற்கு சம்பந்தம் இருக்கிறது என்று பொய்ப் புகார்கள் கொடுத்து பிறகு எங்களிடம் அது குறித்து வெறும் உளவுத்துறை செய்திகள் தான் இருக்கிறது என்று பின் வாங்கினார்!
ஆனால் அவர் உண்மையில் சீக்கியர்களின் ஒட்டுமொத்த ஓட்டு வங்கியும் தனக்கு வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார் என்பது வெள்ளிடைமலை!
ஆனால் அவருக்கு தெரியாது அவரது ஆதரவில் சீக்கியர்கள் கனடா முழுக்கப் பல பகுதிகளை தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்துவிட்டார்கள் என்பது!
நான் தொடர்ந்து எனது நிலைத் தகவல்களில் கனடா இந்திய விவாகரங்கள் குறித்து கூறும்போது இவ்வாறு சீக்கியர்களுக்கு ஆதரவு அளிப்பது கனடாவின் உள்நாட்டிற்குள் பிரச்சினைகளை உண்டாக்கும் என்று சொல்லியிருந்தது இன்று கண்முன்னே
உண்மையாகிவிட்டது!
தேசியத்தைப் பகிர்ந்து கொள்ளும் இம்மாதிரியான புலம்பெயர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் தாங்கள் வாழும் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டபின் அதே தேசியத்தை பிரச்சினைக்கு உள்ளாக்குவார்கள் என்பது உலகில் உள்ள பல நாடுகளில் நடந்து வரும் சம்பவங்கள் தான்.
அதன் அடிப்படையில் கனடா அரசுக்கு பேரதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய கோஷத்தை அங்கு வாழும் காலிஸ்தான் தீவிரவாதிகள் எழுப்பி உள்ளார்கள். “கனடாவில் வசிக்கும் வெள்ளையின மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! அவர்கள் ஐரோப்பிய நாடுகள் அல்லது இஸ்ரேலுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள். அடி மடியிலே கை வைத்து விட்டனர்.
ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதையாக அல்லது இருக்க இடம் கொடுத்தால் மடத்தைப் பிடிக்கும் செயலாக இந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் கனடாவிற்குள் ஒரு பெரும் அரசியல் வன்முறையை நிகழ்த்துகிறார்கள்!
கனடாவின் சர்ரே நகரில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சார்பில் அண்மையில் பேரணி நடத்தப்பட்டது! இதில் பங்கேற்றவர்கள்தான் இந்த புதிய கோஷத்தை எழுப்பிக் கனடா அரசுக்கு சவால் விடுத்துள்ளனர்.
கனடாவின் நேசனல் டெலிகிராப் ஊடகத்தின் மூத்த செய்தியாளர் டேனியில் போர்டு மேன் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளார்! அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில் சர்ரே நகரில் காலிஸ்தானியர்கள் பேரணி நடத்தினர். அப்போது அவர்கள் “கனடா தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடினர்! வெள்ளையின இன மக்கள் ஐரோப்பாவிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று காலிஸ்தானியர்கள் தீவிரமாக கூறுகின்றனர். இவர்கள் இவ்வாறு பேச நாம் அனுமதிக்கலாமா? நமது வெளியுறவு கொள்கையை வரையறுக்க இவர்கள் யார்?”என மிகப் பரிதாபமாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.
என்னத்தைச் சொல்ல! வினை விதைத்தவன் வினை அறுப்பான்!
செல்லம் கொடுத்து உள்ளங்கெட்ட கதையாகத் தான் ஆகப்போகிறது கனடா!

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...