Tuesday, July 22, 2025

கடந்த 1990-களின் தொடக்கத்திலிருந்தே தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரம் நடந்தது


 #Nanguneriindustrialpark

—————————————-
கடந்த 1990-களின் தொடக்கத்திலிருந்தே தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரம் நடந்தது.அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள், நிலமையை அறிய, உச்சநீதிமன்ற நீதிபதி எஸ். ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.
அக்குழு தனது அறிக்கைகளை அன்றைய முதல்வரிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் படி, பெரும்பாலான நிலங்கள் நாங்குநேரி வைணவ மடத்திற்குச் சொந்தமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்போதைய வானுமாமலை நாங்குநேரி மடத்தின் ஜீயர், வானுமாமலை ராமானுஜ ஜீயர் எனக்கு மிகவும் வேண்டியவர். எனது ‘’நிமிரவைக்கும் நெல்லை’’ என்ற புத்தகத்துக்கு அணிந்துரை வழங்கி என்னை பாராட்டியதுண்டு. ஜீயர் மடத்தின் நிலங்களைத் தமிழக அரசிடம் வழங்குவதற்குச் சம்மதம் தெரிவித்தார். இந்த முடிவை எடுக்கும்போது, நான் தான் ஜீயருக்குச் சட்ட ஆலோசனைகளை வழங்கினேன். நிலங்களை அரசுக்கு வழங்கிய பிறகும், அந்த திட்டம் 28 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பாட்டிற்கு வரவில்லை.
இதில், மத்திய அமைச்சராக இருந்த . முரசொலி மாறன் அவர்களின் பணியையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நாங்குநேரி சிப்காட் தொழில்துறை பூங்கா திட்டத்திற்காக 900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும்
திட்டத்திற்காகத் தனியார் பட்டா நிலம் 2042.35 ஏக்கரை வாங்க ரூ.2,871.86 கோடி ஒதுக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு; நாங்குநேரி டோல் பிளாசா பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்தச் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு தாசில்தார் உள்ளிட்ட 117 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன
முதல்வர் மு.க. ஸ்டாலின் நாங்குநேரியில் சிப்காட் தொழில்துறை பூங்கா அமைப்பதாக அறிவித்ததின் விளைவாக, தற்போது தமிழ்நாடு அரசுத் திட்டத்திற்காக நாங்குநேரி அருகே 915.03 ஹெக்டேர் (2,260.13 ஏக்கர்) பட்டா மற்றும் அரசுப் பொறம்போக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்தபோது, நாங்குநேரி மற்றும் மூலைக்கரைப்பட்டியில் தொழில்துறை பூங்காக்கள் அமைக்கப்படும் எனவும், ஏற்கனவே நிறைவடையும் நிலையில் உள்ள கங்கைகொண்டான் சிப்காட் தொழில்துறை வளாகத்திற்குப் பதிலாக புதிய வளாகங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி, 326.86 ஹெக்டேர் தனியார் பட்டா நிலம் மற்றும் 88.17 ஹெக்டேர் அரசுப் பொறம்போக்கு நிலங்களைக் கையகப்படுத்த அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தனியார் நிலங்கள் உரிமையாளர்களுடன் நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் வாங்கப்படும். அரசுப் பொறம்போக்கு நிலங்கள் உரிமை மாற்றத்தின் மூலம் பயன்படுத்தப்படும்.
மாவட்டத்தில் நிலங்களை அடையாளம் காணும் பணிகளை முன்னெடுக்க, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டு, 2,042.35 ஏக்கர் தனியார் பட்டா நிலங்களை வாங்க ரூ.871.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
நாங்குநேரி டோல் பிளாசா சுற்றுப்புறத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த, 117 பணியிடங்கள் – சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சிறப்பு தாசில்தார் உள்ளிட்டோர் – உருவாக்கப்பட்டுள்ளன. திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலங்கள், கன்னியாகுமரி-திருநெல்வேலி நான்கு வழிச் சாலைக்கு அருகாமையில் உள்ளதால், பொருட்கள் போக்குவரத்து வசதியாக இருக்கும்.
ஒரு பெரிய இந்திய நிறுவனம் இங்கே தனது உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வகையில் ஜாக்கெட், ஸ்போர்ட்ஸ் ஷூ போன்ற தயாரிப்புகள் இங்கே உருவாக்கப்படலாம் என சிலர் நினைக்கின்றனர்
பழைய திட்டம் பயனில்லை
முதல்வர் ஸ்டாலின் அறிவித்த இந்த புதிய தொழில்துறை பூங்கா திட்டம் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பின் மூலம் ஒரு கட்டத்திற்குச் சென்றிருப்பதுடன், 2001-ம் ஆண்டு மார்ச்சில் தற்காலிக முதலமைச்சர் மு.கருணாநிதி அறிவித்த நாங்குநேரி பல்துறை சிறப்புப் பொருளாதார மண்டலம் (SEZ) இன்னும் முழுமையாக செயல்படவில்லை.
கங்கைகொண்டான் சிப்காட் தொழில்துறை வளாகத்தில் தொழிற்சாலைகள் உள்ள முதலாளிகள், புதிய சிப்காட் வளாகம் உருவாகும் தகவலால் உற்சாகமடைந்துள்ள
தாகவும், அதே நேரத்தில் நாங்குநேரி SEZ திட்டத்தையும் உயிர்ப்பிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருகின்றனர்.
சட்டச் சிக்கல்கள்:
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள தொடங்கிய திட்டம்தான் நாங்குநேரி SEZ. அதனால் ஸ்டாலின் இதனை மீண்டும் செயல்படுத்தக் கடுமையாக முயற்சி எடுக்க வேண்டும். சில சட்டச் சிக்கல்கள் இருந்தாலும் அதைத் தீர்ப்பது அரசு விரும்பினால் சாத்தியமே. நாங்குநேரி SEZ மற்றும் புதிய சிப்காட் திட்டம் இரண்டும் செயல்பட்டால், தூத்துக்குடி மற்றும் விழிஞ்சியம் துறைமுகங்களுக்கு அருகிலுள்ள தெற்குப் பகுதி விரைவில் தொழில்துறை வளமான பகுதியாவதாக மாறும்.
படம்-Sasikumar Samikan

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...