Monday, July 28, 2025

வைகோ செய்த தியாகங்களை யாரும் மறக்கவில்லை. பதவி காலம் முடிந்து ராஜ்ய சபாவில் அவர் விடைபெறும் போது எதிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறார்.

 வைகோ செய்த தியாகங்களை யாரும் மறக்கவில்லை. பதவி காலம் முடிந்து ராஜ்ய சபாவில் அவர் விடைபெறும் போது எதிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறார். சமரசம் என்றால் என்ன அர்த்தம்? திமுகவுடன் கூட்டணி சேர்ந்து 21 சீட்டுக்கு பேசி முடித்த பிறகு 2001 இல் முகத்தை திருப்பிக் கொண்டு போனது தான் சமரசமா. அதேபோல உங்களைப் பிடித்து ஜெயிலில் வைத்த ஜெயலலிதாவிடம் போய் ஒரே நாளில் 35 சீட்டுகள் கேட்டு வாங்கி கூட்டணியில் நின்றது சமரசமா? யாருக்கும் அடிபணிய மாட்டேன் என்று சொல்லிவிட்டு ஸ்டாலின் வேஸ்டியில் இருக்கும் கறையைப் போக்குவதா அடி பணியா சமரசம்! உங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டார்கள் என்று கூப்பாடு போடுகிறீர்கள்! நன்றி இல்லாத உங்களால் பொன் முத்துராமலிங்கம் மற்றும் எனது அரசியல் வாழ்க்கையும் அஸ்தமித்து விட்டதே.!

உங்கள் நன்றியற்ற நடவடிக்கை தான் எல்லாவற்றுக்கும் காரணம்! இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது வைகோ அவர்களே!
Your own commissions and omissions lengthy…. வாரிசு அரசியல் ⁉️ஐந்து பேர் உங்களுக்காக தீக்குளித்தனர்? இதிலும் சமரசமா❓

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்