Thursday, January 21, 2016

Nalanda University,


Nalanda is considered one of the first great universities in recorded history. It was the centre of Buddhist learning and research in the world from 450 to 1193 CE.

Historical sources indicate that the University had a long and illustrious life which lasted almost continually for 800 years from the fifth to the twelfth century CE. It was a completely residential university with over 2,000 teachers and 10,000 students. The Nalanda ruins reveal through their architectural components the holistic nature of knowledge that was sought and imparted at this University. It suggests a seamless co-existence between nature and man and between living and learning.

The profound knowledge of the Nalanda teachers attracted scholars from places as distant as China, Korea, Japan, Tibet, Mongolia, Turkey, Sri Lanka and South East Asia. These scholars have left records about the ambience, architecture and learning of this unique university. The most detailed accounts have come from Chinese scholars and the best known of these is Xuan Zang who carried back many hundred scriptures which were later translated into Chinese.

Close to the end of the twelfth century Nalanda was destroyed by invaders. The period from which Nalanda ceased to exist was a time that the great universities of the western world came into being, marking the shift in knowledge production and dissemination from the East to the West. Other world university Al Azhar in Cairo (972 CE), Bologna in Italy (1088 CE) and Oxford in the United Kingdom (1167 CE ). 

We forget to record kandallur salai said to be military university.#nalanda

Mrinalini Sarabhai

In 1949, when the dancer Mrinalini Sarabhai toured France, the press dubbed her  ‘Les Bomb Atomique des Hindous’ and her husband, Vikram, who would head India’s nuclear and space programmes, ‘the Indian Joliot-Curie’.  She was past 80 when I interviewed her for my biography of Vikram Sarabhai -- always elegant, poised and involved in a myriad causes. A brief excerpt from ‘Vikram Sarabhai-A Life’ to bid her a fond farewell: 
“Meeting Mrinalini again, as an adult, in Bangalore... Vikram was struck by the transformation in her personality. The frisky teenager, he realized, had grown into an elegant, young woman and one quite different from the tennis, bingo, ballroom dancing obsessed creature he had met. In fact, Mrinalini had taken a leap in quite another direction: she had become passionately involved in the study of bharata natyam. The interest had led her from a stint at Tagore’s Shantiniketan to Ram Gopal’s school in Bangalore. She had even sworn, she told him, to stay unmarried, in order to give herself completely to her art. Her engagement, so akin, it seemed, to his own involvement in science touched a chord in Vikram. He asked her out. They began to date. 

There were long, romantic drives in Vikram’s Bantam and endless conversations. They munched on fresh makkai and recited poetry to each other; Mrinalini breaking into lyrical Bengali recalling Tagore and Shanti Niketan; Vikram quoting Kalidas. Both professed repeatedly to have no inclination for marriage and yet they were moving relentlessly closer.”

Monday, January 18, 2016

புதிய தலைமுறையின் மக்கள் மேடை விவாதம்

புதிய தலைமுறையின் மக்கள் மேடை விவாத அரங்கில் இரு தினங்களுக்கு முன்பு உழவர்கள் பிரச்னை பற்றி விவாதிக்கப்பட்டது. பார்க்கவேண்டும் என்று நினைத்த நிகழ்ச்சி. ஆனால் கேபிள் பிரச்னை. இப்போது பார்த்தேன்.

விவாத நிகழ்ச்சிக்கு வந்திருந்த கருத்தாளர்களை அறிமுகம் செய்துவைத்த விதம் மிகச்சிறப்பு. எல்லா நிகழ்வுகளிலும் இப்படிச் செய்யமுடியாது என்றாலும், சிறப்பு நிகழ்ச்சிகளின்போது மட்டுமேனும் துறைசார் நிபுணர்களின் பங்களிப்பு பற்றி சற்று விரிவாகப் பதிவுசெய்யலாம். அதற்கான நல்ல தொடக்கம் இந்த நிகழ்ச்சி.

நிகழ்ச்சியை முழுமையாகப் பார்த்துமுடித்தேன். ஆக்கபூர்வமான விவாதம். அடுத்தகட்டம் பற்றிய யோசனையையும் விவாதத்தையும் உந்தித்தள்ளும் வகையில் அமைந்தது. மகிழ்ச்சி.

என்னதான் விவசாயம் தொடர்பான நிகழ்ச்சி என்றாலும், என் கவனம் அரசியலின்மீதுதான். விவாதத்தினூடாக நண்பர் கே.எஸ்.ஆர் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டார். இந்தியாவில் விவசாயிகளுக்கு ஆதரவாளர்களாக இருப்பவர்கள் ஆட்சியதிகாரத்தில் நீடிப்பதற்கு இதர அரசியல்வாதிகள் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்த கே.எஸ்.ஆர், அதற்கான உதாரணங்களாக ஓமந்துரார், சரண் சிங், தேவிலால் ஆகியோரைச் சுட்டிக் காட்டுகிறார். என்ன காரணமாக இருக்கும்?

முக்கியமாக, “ஓமந்துர் ராமசாமி ரெட்டியார்தான் அணைகளைக் கட்டினார். ஆனால், இந்தியாவில் முதன்முறையாக மொட்டை பெட்டிஷன் போட்டது ஓமந்தூரார் மீதுதான். நேரு அவர்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.” என்ற தகவலையும் பதிவுசெய்தார்.

அந்த மொட்டை பெட்டிஷன் போட்டது யாராக இருக்கும் என்பது பற்றிய எந்தவித க்ளூவையும் கே.எஸ்.ஆர் கொடுக்கவில்லை. நேரலையில் மனம் திறக்காத கே.எஸ்.ஆர் ஃபேஸ்புக்கில் மன திறப்பாரா?



இவ்வாறு நண்பர் ஆர்.முத்துக்குமார் அவர்கள் தனது முகநூலில் பதிவு செய்து, அதை என்னுடைய பக்கத்தில் இணைத்துள்ளார்.

கடந்த 15.1.2016 அன்று புதிய தலைமுறை விவசாயிகளின் பிரச்சினை குறித்து விவாதத்தில் பங்கேற்றபோது, விவசாய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் சென்னை இராஜதானி பிரதமராக இருந்தார். (அப்போது முதல்வரை பிரதமர் என்றுதான் அழைப்பார்கள்). அவர் இருந்தபோது இருந்தபோது, ஆந்திராவும், கர்நாடகத்தில் சில பகுதிகளும், கேரளத்தில் சில பகுதிகளும் இணைந்த பெரிய மாநிலமாக இருந்தது.  சிறப்பான நிர்வாகத்தோடு நேர்மையாக ஆட்சி நடத்திய ஓமந்தூராரை சில சக்திகள் பதவியிலிருந்து அப்புறப்படுத்த திட்டமிட்டது எல்லாம் கடந்த கால செய்திகள்.  அவர் மீது புகார் கடிதங்கள் அன்றைய பிரதமர் நேருக்கு அனுப்பப்பட்டது. படேல் அவர்கள் கூட இது குறித்து விசாரித்து ஓமந்தூரார் அப்பழுக்கற்றவர் என்று சொல்லியும், ஓமந்தூராரை அமைதியாக முதலமைச்சர் பணியை செய்யவிடாமல், அவரே முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகி, வடலூர் சென்று வள்ளலாரின் சன்மார்க்க கொள்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார் என்பதுதான் உண்மை.  இந்த செய்திகளை 1979, 1980 கால கட்டங்களில் தினமணி ஆசிரியர் ஏ.என். சிவராமன் அவர்கள், கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மூலமாக கேட்டுள்ளேன். இறுதியாக 1994 கட்டத்தில் மறைந்த பிரபல பத்திரிகையாளர் எஸ்.எஸ். மாரிசாமி (முன்னாள் எம்.பி.) அவர்களும் கூட என்னிடம் இது குறித்து விவரமாக 1994ல் அவரை சந்திக்கும்போது விரிவாக பேசும்போது அறிந்துகொண்டேன்.  இன்றைக்கு இந்த மூவரும் நம்மோடு இல்லை. எனவேதான் இது ஆய்வுக்கு உட்பட்டது என்று புதியதலைமுறை தொலைகாட்சி விவாதத்தில் தெரிவித்தேன்.  அக்காலத்திலும் தகுதியே தடை. பொது வாழ்வில் இருந்தவர்க்ள் அப்போதும் அவமானங்களையும், பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.

ஓமந்தூரார் காலத்தில் இந்த அளவு ஊடகங்களும், செய்தித்தாள்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இல்லை என்பதையும் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.  எனவே இந்த உண்மை குறித்து ஆய்வு நடத்தினால் பல செய்திகள் தெரியவரும் என்பதைத்தான் அன்றைய விவாதத்தில் குறிப்பிட்டேன்.

இதனை R Muthu Kumar க்கும், Venkada Prakash க்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Saturday, January 16, 2016

//  Pongalur Era Manikandan  உழவர் திருநாளில் புதிய தலைமுறையில் நேற்று நடைபெற்ற மக்கள் மேடையில் உழவர்களின் குரலை ஓங்கி ஒலிக்க செய்த அண்ணன் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களின் கோபமும்,ஆக்ரோஷமும் விவசாயிகள் மீண்டும் திருப்பி அடிப்பார்கள் என்று வரலாற்றைத் திருப்பி விட்டு இருக்கிறார்.
விவசாயிகளுக்காக இளைஞர்கள் உழைக்கிறார்கள்.போராடுகிறார்கள் என்று மிகவும் எளியோனாகிய அடியேன் பெயரையும் குறிப்பிட்டு பதிவு செய்தமைக்கு நெகிழ்வான நன்றி அய்யா கே.எஸ்.ஆர்.
நெறியுரை மிகவும் நெகிழ்வாக இருந்தது.திரு.வேங்கடப்பிரகாஷ் அவர்கள் ஒரு விவசாயியின் மகன் என்று உணருகிறேன்.////

நன்றி அய்யா... எப்பொழுதுமே கே.எஸ்.ஆர். அவர்கள் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லிவிடும் தன்மையர். உங்களைக் குறிப்பிட்டிருக்கிறாரென்றால்... ஆம் உழவர்க்குழைக்கும் உங்களைப் போன்றோர் உயர்த்திப்பிடிக்கப்படவேண்டியவர்களே :)

நீங்கள் உணர்ந்ததைப்போல் நானும் ஒரு விவசாயக்குடும்பத்திலிருந்து வந்தவனே...! தந்தை வழியில் தாத்தா பாட்டி காலத்தோடு போயிற்று. தாய்வழியில் தாய்மாமனார் இன்னும் 20 ஏக்கர் கரிசல் காட்டில் வெற்றிகரமாக ஏரோட்டிக்கொண்டிருக்கிறார். கலிங்கப்பட்டி அருகில் விஜயரங்கபுரம் எனும் கிராமத்தில் (புகைப்படங்கள்) :)

அடுத்து, நிகழ்ச்சியில் கே.எஸ்.ஆர்.அவர்கள் திடீரென சந்நதம் கொண்டவரைப்போல் ‘’ விவசாயிகள் திருப்பியடிப்பார்கள் ‘’ என்று உரத்த குரலில் சொன்னது வருச நாட்டு பளியன் சித்தனின் சாபத்தைக் கேட்டதைப்போல் குலை நடுங்க வைத்துவிட்டது. இறுதிநொடிகளில் என்னையறியாமல் சொன்ன ‘’ ஏதோ நடக்கப்போகிறது ‘’ என்ற வார்த்தைகள் இந்த நொடியில் நினைவுக்கு வருகின்றன. விதை நெல்லை விற்றுவிடலாகாது... ஒருங்கிணைவோம்...மீட்போம்... 

அன்புக்கு நன்றி.
"இந்திய தேசியக்கொடி கூட மரபணு மாற்றப்பட்ட பருத்தியிலிருந்து தான் தயாராகியுள்ளது.இது எத்தனை பேருக்குத் தெரியும்.இந்தியாவில் விளையும் 98% பருத்தி மரபணு மாற்றப்பட்ட மான்சாண்டோ பருத்தி.." என்று "நல்ல சந்தை" என்ற அமைப்பை இயற்கை விவசாயத்தை லாபகரமானது என்பதை உணர்த்துவதற்காகவேத் துவக்கிய திரு.ஜெகநாதன்,

"குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்தவர்களுக்கான ஒரு நினைவுத் தூண் தமிழ்நாட்டில் நிறுவப்பட காரணமே,

தமிழ்நாட்டில் விவசாயிகளின் போராட்டத்தை நடத்திக் காட்டியவரும்,உழவர்களுக்காகவே ஒரு அரசியல் கட்சியைத் துவக்கி நடத்தியவருமான நாராயணசாமி நாயுடு தான்" என்ற தகவலைச் சொன்ன தராசு இதழின் ஆசிரியர் ஷ்யாம்.

"மரபணு மாற்றப்பட்ட விதைகள் விவசாயத்தை மட்டும் அழிக்கவில்லை.நம் கலாச்சாரத்தையே அழிக்கிறது" என்பன போன்ற அதிர்ச்சியான தகவல்களைச் சொன்ன பூவுலகின் நண்பர்கள் குழுவைச் சார்ந்த சித்த மருத்துவர் கு.சிவராமன்,

என்று தெரியாத பல அரிய தகவல்களைக் கொண்டு-உழவின் சிறப்பை விளக்கும் நிகழ்ச்சியாக அமைந்தது "மக்கள் மேடை" யின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி.

இளையராஜாவின் அதிரடி இசையுடன் ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் ஆரம்பக் காட்சியில் ஹீரோவின் அறிமுகத்தைப் போல-நெறியாளர் Venkada Prakash நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பேச்சாளர்கள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திய விதம் அருமை.அத்தகைய அருமையான அறிமுக உரை,கொஞ்சம் கூட மிகைப்படுத்தப்பட்டதல்ல என்பதாக அமைந்தது பங்கு கொண்டவர்களின் அனுபவம் மற்றும் அவர்கள் தந்த தகவல்கள்.பங்கு கொண்டவர்கள் அனைவருக்கும் சம வாய்ப்புக்களைத் தந்ததோடு,பார்வையாளர்களை அவர்களின் பெயர்களைச் சொல்லி அழைத்தது அனைத்திலும் அருமை.

"இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஒரு விவசாயியை-தன் உரிமையைக் கேட்டான் என்பதற்காக அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் சுட்டுக் கொன்றது.அன்று தொடங்கி இன்று வரையிலும் கூட விவசாயிகளின் மரணங்கள் நின்ற பாடில்லை" என்று தன் பேச்சைத் தொடங்கிய நிகழ்ச்சியின் மற்றொரு விவாதவாளரும்,கரிசல் காட்டு விவசாயியும்-வழக்கறிஞருமான திரு Radhakrishnan KS அதன் பின் சொன்னது எல்லாமே அரிய தகவல்கள்.

"விவசாயிகளின் முதல்வர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் தான்.அவரது ஆட்சிக்காலம் மிகக் குறுகியதாக இருந்தாலும் அதில் அவ்வளவு சாதனைகளைச் செய்தார்.அதே வேளை விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னிறுத்திய லால்பகதூர் சாஸ்திரியோ,சரண்சிங்கோ ஆட்சியில் அதிகம் நீடிக்கவில்லை.இந்தியாவில் இதுவரையிலும் கிட்டத்தட்ட மூன்று லட்சமும்,தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் கிட்டத்தட்ட 40 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்,1957 ல் தொடங்கி 70 விவசாயிகள் தங்கள் உரிமைகளைக் கேட்டுப் போராடியதற்காகச் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்,வேறெந்த தொழில்களில் இவ்வாறு நடந்திருந்தால் தொழிற்சங்கங்கள் சும்மா விடுமா? இந்தியாவே எரிந்திருக்கும்" என்று சரவெடியாக வெடித்தவர்,

"கோவை லட்சுமி மில்ஸ் அதிபர் ஜி.கே சுந்தரம் எம்பி,திரு.நாராயணசாமி நாயுடு,ரா.கிருஷ்ணசாமி கவுண்டர் எம்எல்ஏ,கரூர் முத்துசாமி கவுண்டர் எம்பி,அரூர் முத்து கவுண்டர் எம்பி,தென்காசி திரு.ஏ.ஆர்.சுப்பையா முதலியார் எம்எல்ஏ,சாத்தூர் முள்ளிச்செவலைச் சார்ந்த ராம்மூர்த்தி எம்பி,டாக்டர் திரு.கொண்டல் சாமி,திரு.கு.வரதராஜன்,திரு.ஜெகந்நாதன்,திரு.பால்பாண்டி,திரு.சங்கிலி எம்எல்ஏ,அதிசயமணி" என்று விவசாய சங்கங்கள் உருவாக உழைத்தவர்களைப் பட்டியலிட்டதோடு,

"கரிசல் இலக்கிய மேதை திரு.கி.ரா கூட விவசாயப் போராட்டத்தில் கைதாகி ஆறு மாதங்கள் சிறையில் இருந்தார்"என்றார்.அக்காலத்தில் விவசாயப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தி-இந்திரா காந்தியையே நடுநடுங்க வைத்த திரு.நாராயணசாமி நாயுடுவிற்கு அவர் மறைந்த கோவில்பட்டி நகரத்தில் சிலை வைக்க,தான் படும் போராட்டத்தை விளக்கிய கேஎஸ்ஆர்,

"தமிழ்நாட்டிலேயே ஒரு மாநில முதல்வருக்கு எதிராக-"மொட்டை பெட்டிஷன்" போடப்பட்டது-விவசாயிகளின் முதல்வரான ஓமந்தூராருக்கு எதிராகத்தான்.அதைச் செய்தவரின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை.அது ஆய்வு செய்யப்பட வேண்டியது" என்ற அதிர்ச்சியான தகவலையும் சொல்லத் தவறவில்லலை.

மொத்தத்தில் வழக்கமான டிபேட் கிளஷேக்கள் இல்லாமல்-அட்டகாசமான அரிய தகவலைக் கொண்டதாக அமைந்து-உழவின் தேவையையும் உணர்த்தியதோடு,

"எவர்களையோ" திருப்திப்படுத்த காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளைப் போல உலகத்தின் அச்சாணியான உழவுத் தொழிலும்,கட்டிடக் காடுகளை உருவாக்கும் காட்டுமிராண்டி ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரர்களுக்காக,

"காட்சிப்படுத்தப்பட்ட தொழில்கள்" பட்டியலில் காரணமின்றி சேர்க்கப்பட்டு,எதிர்காலத்தில் தடை செய்யப்பட்டுவிடுமோ என்ற பயத்தையும் உருவாக்கி விட்டது.

நம் கடமை காத்திருக்கிறது........
பெரும்பாலும் விருந்தினர்கள் தலைநகரத்திலேயே குடியிருப்பதால் அவர்களைத் தலைநகரத்தில் அவர்கள் ஆற்றும் பணிகளால் மட்டுமே அறிந்துவருகிறோம். ஆனால் அவர்களுக்கும் வேர்கள் உண்டு அவற்றிலிருந்து கிளைத்தெழுந்த பல்வேறு கிளைகள் உண்டு. இன்றைய விருந்தினர்களை நான் அவர்களது வேர்களோடு சேர்த்துச் சற்று நேரமெடுத்து அறிமுகம் செய்விப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். 
ஓர் இராணுவ வீரனுக்கு இருக்கவேண்டியதை விட அதிகமான மனவலிமையும் உடல்வலிமையும் ஒரு விவசாயிக்குத் தேவை. அதிலும் வானம் பார்த்த கரிசல்பூமி விவசாயிக்கு அளவற்ற நெஞ்சுரம் தேவை. அதனாலேயே இயல்பில் சற்றே சினங்கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அப்படியொருவர். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி காலத்தில் இளம் வயதில் விவசாய சங்கத்தின் மாணவர் அமைப்பில் களப்பணியாற்றியவர். ஒரு சூழலில் களபலி ஆகவும் துணிந்தவர். இன்றும் பல ஏக்கர் நிலத்தில் விவசாயத்தை விட்டுவிட்டுக்கூட அல்லாமல் விடாமல் செய்துகொண்டிருப்பவர். புன்செய் புண்ணாக்கினாலும் கரிசலைக் கரும்பாய்க் கருதுபவர். தன்னை வருத்தினாலும் பருத்தி போடுவதை மட்டும் நிறுத்தாதவர். விழுந்து விழுந்து எழுந்தாலும் உளுந்து விதைக்கத் தவறாதவர். உழவர் வாழ்வியலையே முதன்மையாகப் பதிவுசெய்யும் கதைசொல்லி இதழாசிரியர். வழக்கறிஞராகவும் அரசியல்வாதியாகவும்கூட இருக்கிறார். உழவர் திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள்.
- Venkada Prakash  Puthiya Thalaimurai 15/1/2015

Eelam issue; Vattukottai Resolution

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டினை மையப்படுத்திய கூட்டுச் செயற்பாடு : புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டறிக்கை !

நாற்பது ஆண்டுகளை எட்டியிருக்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை வலுவூட்டியும், அத்தீர்மானத்தினை அரசியல் ரீதியாக முழுவீச்சுடன் அடுத்த கட்டத்துக்கு இவ்வாண்டு எடுத்துச் செல்வதற்கும் கூட்டாக இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாக புலம்பெயர் அமைப்புக்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய அமைப்புகள் விடுத்துள்ள இக்கூட்டறிக்கையில், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது எழுச்சியாண்டில் அதன் அரசியல் முக்கியத்துவத்தை ஒரு முகமாக வெளிப்படுத்தும் வகையில் ஒற்றை இலச்சினையினைப் பயன்படுத்துவதெனத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளன.

இதேவேளை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை அடித்தளமாகக் கொண்டு செயற்படுகின்ற அனைத்து தமிழர் அமைப்புக்களையும் ஒன்றாக இணைந்து செயற்பட வருமாறு உரிமையோடு அழைப்பதாக அவ்வறிக்கையில் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழர் திருநாளாம் தைத் திருநாளில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் :

தமிழ் உறவுகள் அனைவருக்கும் எங்களது தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக! 

தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை 1976 இல் உலகிற்கு முரசறைந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது எழுச்சியாண்டில் நாம் இன்று காலடி பதித்துள்ளோம். 14.05.1976 அன்று தந்தை சா.ஜே.வே செல்வநாயகம் அவர்களின் தலைமையில்; நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானமானது தமிழ் மக்கள் தாம் பட்டறிந்த அனுபவங்களின்;படி எக்காலத்திலும் சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்புக்குள்; வாழ்தல் சாத்தியமற்றது என்பதனைத் தெளிவாக முரசறைந்தது. 1977ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது இத்தீர்மானத்தை தேர்தல் விஞ்ஞாபனமாகக் கொண்டு போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து தமிழ் மக்கள் தமது தெளிவான ஆணையையும் வழங்கியிருந்தனர்.  

இன்று நாற்பது ஆண்டுகள் கழிந்த பின்;னரும் 1977ம் ஆண்டுத் தேர்தலின்போது வழங்கப்பட்ட ஆணை மக்கள் மனங்களில் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது. 1983இல் கருத்துச் சுதந்திரத்தை மறுதலிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டமூலம் தமிழீழம் எனும் தனிநாட்டை அரசியற் தீர்வாக ஏற்றுக்கொள்வது பற்றிப் பேசுவதையே தண்டனைக்குரிய குற்றமெனப் பிரகடனப்படுத்தியதன் மூலம், தாயக மக்கள் தமது உண்மையான அரசியல் விருப்பைத் தெரிவிக்கவல்ல அரசியல்வெளி இன்று மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சர்வதேச சட்டங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்;படையில் ஈழத் தமிழ் மக்கள் தமது தன்னாட்சி உரிமையினை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

முள்ளிவாய்க்காலில் நடாத்தப்பட்ட பெரும் இனவழிப்புப் போர் மூலம் தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து, தமிழ் மக்களின் விடுதலை வேட்கையினை சிறிலங்கா அரச பயங்கரவாதம் அடக்கிவிட நினைத்தாலும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் மூச்சில் தமிழீழ விடுதலை பற்றிய கனவும் எண்ணங்களும் கலந்தே உள்ளன. முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்புக்குள் தமிழ் மக்கள் வாழ்தல் சாத்தியமே அற்றது என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

போர் ஒன்றின் ஊடாகத் தாம் பெற்ற இராணுவ வெற்றியினை சிங்கள ஆட்சியாளர்கள் அரசியல் வெற்றியாக்க முனைகின்ற நிலையும், அனைத்துலக அரசுகள் தமது நலன்களின் அடிப்படையில் அமைந்துள்ள சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்தினைத் தக்கவைப்பதில்; கொண்டுள்ள அக்கறையும் இன்று ஒரே புள்ளியில் சந்திக்கின்றன.

ஈழத்தமிழர்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்தி நிற்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவும், தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைக்குத் தீர்வு வழங்குவதாகக் கூறி புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை வரைவதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் எடுக்கும் முயற்சிகளும் இவ் ஆண்டில் எதிரெதிரே சந்திக்கின்றன. மறுபுறத்தில் இயல்பு வாழ்க்கை மறுக்கப்பட்டு, இராணுவ நெருக்குவாரங்களுக்குள் வாழும் தமிழ் மக்கள், ஆறாம் திருத்தச்சட்டம் அமுலில் உள்ள நிலையில், தமது அரசியல் வேணவாக்களை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளி முற்றாக மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈழத்தமிழர்களின் அரசியல் விருப்பினை வெளிப்படுத்தவதற்கு ஐ.நா. மேற்பார்வையில் ஓப்பங்கோரல் முறையிலான வாக்கெடுப்பினை நடாத்துவதன் அவசியத்தினை நாம் வலியுறுத்தி நிற்கும் அதே வேளையில், இவ்விடயத்தில் ஈழத் தாயகமும் - புலம் பெயர் மக்களும் - தமிழகமும் - உலகத் தமிழர்களும் இணைந்து ஒன்றையொன்று வலுப்படுத்தும் வகையிலான மூலோபாயத்துடன் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இதன் அடிப்படையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவையும், அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டினை வலுவூட்டவும், இவ்வாண்டின்போது தீர்மானத்தின் அத்தனை பரிமாணங்களையும்; அரசியல் ரீதியாக வீச்சுடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்குமான செயற்திட்டங்களின் அடிப்படையில் கூட்டாக இணைந்து செயற்படுவதெனத் தீர்மானித்துள்ளன.

இதன் முதற்படியாக, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது எழுச்சியாண்டில் அதன் அரசியல் முக்கியத்துவத்தை ஒரு முகமாக வெளிப்படுத்தும் வகையில் ஒற்றை இலச்சினையினைப் பயன்படுத்துவதெனத் தீர்மானித்து மேலேயுள்ள இலச்சினையை வடிவமைத்துள்ளோம்.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை அடித்தளமாகக் கொண்டு செயற்படுகின்ற அனைத்து தமிழர் அமைப்புக்களையும் ஒன்றாக இணைந்து செயற்பட வருமாறு இத்தால் உரிமையோடு அழைப்பு விடுக்கின்றோம்.

நன்றி, தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AUG 27