Monday, March 19, 2018

ஜெனீவா ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டம்

ஜெனீவா ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் என்னையும்,திருச்சி சிவாவையும் கலந்து கொள்ளும் படி கழகச் செயல் தலைவர் அறிவுறுத்தியிருந்தார்.
பல்வேறு காரணங்களால் என்னால் செல்ல இயலவில்லை. இந்த முறையும் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைப்பதில் தடையும் தாமதமாகும் நிலைமை தான்.
ஆனால் தமிழகத்தில் டெல்டா பகுதியில் டெல்டா விவசாயிகளை பாதிக்கும் எரிவாயுத் திட்டத்தையும் , தூத்துக்குடி நகரில் நஞ்சைக் கக்கும் ஸ்டெர்லைட்டைப் பற்றியும் ஐநா மனித உரிமை ஆணையத்தில் குரல் கொடுக்கப்பட்டது வரவேற்க வேண்டிய செய்தியாகும்.

No comments:

Post a Comment

Mar 22