Thursday, May 30, 2024

தியானம்

#*தியானம்*
—————-
தியானம் உண்மையிலே மிக எளிதானது. தியானம் என்பது தன்னை அறியும் மெளன உரையாடல்…அமைதி- tranquility மொழி.

தியானம் என்பது சில நன்மைகளை உணர அல்லது மனதின் உள்ளடக்கத்தை அறியாமல் அதனை ஒப்புக் கொள்ள, அல்லது தியானத்தையே ஒரு முடிவாக நினைத்து ஒரு நபர் மனதை இயக்குதல் அல்லது பயிற்றுவித்தல், அல்லது உணர்வு நிலையைத் தூண்டுதல் மூலம் செய்யப்படும் நடைமுறையாகும்.

உங்கள் தினசரி தியானப் பயிற்சியின் மூலம், நீங்கள் சிறப்பாக கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், மன அழுத்த சூழ்நிலைகளை நன்கு நிர்வகிக்கவும் முடியும், அதேபோல உங்கள் மன தைரியத்தின் உற்பத்தித்திறன் உயர்வதையும் காணலாம். சில நிமிட தியானம் கூட மன அழுத்தத்தைக் குறைக்கவும், உள் அமைதியை உணரவும் உதவும். இது தூக்கமின்மைக்கு நன்றாக வேலை செய்கிறது மற்றும் பாரம்பரிய சிகிச்சைகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.

தியானத்தின் குறிக்கோள் உங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது அல்ல, அவை உங்களைக் கட்டுப்படுத்த நினைப்பதை தடுப்பது.

நாம்  அதைக் கடினமாக்குகின்றோம் அதனைச் சுற்றி எண்ணங்களால் ஒரு வலை பின்னுகின்றோம். அது இதானென்றும், அதுவல்ல வென்றும்... ஆனால் தியானம் அப்பொருட்களில் ஏதுமில்லை. அது மிகவும் எளிதானதாயிருப்பதனால்  தான் நாம் அதைக் கிரகித்துக் கொள்ளச் சிரமப்படுகின்றோம். நம்முடைய அறிவு குழம்பிக கிடப்பதினால், காலம் என்பதால் வீணடைவதால் , காலத்தின் அடிப்படையிலேயே சுழல்வதனால் தான் இந்த தியானத்தை நாம் சரி வரப் புரிந்து கொள்வதில்லை. அதனால் தான் வருகின்றன நம் தொல்லைகள். ஆனால் தியானமோ,சர்வசாதரணமாக வியக்கத்தக்க எளிமையுடன், நீங்கள் நடக்கும் போதோ, ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும் போதோ, பிரம்மாண்டமான மலைச் சரிவுகளைக் காணும் போதோ, இயல்பாக வெளிப்படுவது. நாம் ஏன் கண்களில் நீரும் உதட்டில் பொய்ச் சிரிப்புடனும் நம்மை நாமே துன்புறுத்திக் கொள்ளும் மனிதர்களாக இருக்கின்றோம். நீங்கள் மட்டும் இந்த மலைகள் இடையே அல்லது கோப்பினுள்ளே அல்லது நீண்டு கிடக்கும் மணல் சரிவிலே தனியாக நடந்து பார்த்தீர்களானால், அத்தகைய தியான நிலை என்ன என்பதை உணர்வீர்கள்.

தியானம் என்பது தளர்வு, உள் சக்தி அல்லது உயிர் சக்தியை (கி, ரெய்கி, பிராணா, போன்றவை) உருவாக்குதல் மற்றும் இரக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல்,அன்பு, பொறுமை, தாராள குணம் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ள நுட்பங்கள் போன்ற பரந்த பல்வேறு நடைமுறைகளை குறிக்கிறது. குறிப்பாக ஒரு இலட்சிய வடிவம் தியானம் ஒற்றை-குறியிடப்பட்ட செறிவை சிரமமின்றி தொடர்ந்து நோக்குகிறது. இது அதன் பயிற்சியாளரை எந்தவொரு வாழ்க்கை செயல்பாட்டில் ஈடுபடும் போதும் ஒரு அழிக்கமுடியாத நல்வாழ்வு உணர்வை அனுபவிக்க உதவுகிறது.

#highlightseveryone
#everyonehighlights
#everyonefollowers
#highlight #life #likeforlikes
#everyone

#தியானம்
#கேஎஸ்ஆர்போஸ்ட
#ksrpost
30-5-2024.


No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...