எப்போதும்
யாருக்காகவோ பழி சுமந்து
யார் தவறுகளுக்கோ சாட்சியாகி யார் சாபங்களையோ தலைமேல் சுமந்து
யார் பாவங்களுக்காகவோ தலைகுனிந்து
யார் வெறுப்பிற்கோ குருதி சிந்தி யார் கண்ணீருக்கோ விலைகொடுத்து
ஒரே ஒரு முறை
இந்த சாபங்களுக்கெல்லாம்
நான் தகுதியானவள் தானென
என்னை நானேத் தேற்றிக்கொள்ளவேனும்
எனக்கான பாவங்களை
எனக்கு நானே
இழைத்துக்கொள்வேன்
பின்னும்
என் கரங்கள் செய்தவற்றுக்காய்
என்னை கழுவிலேற்றுங்கள்
ஏற்கிறேன்
பிறர் பாவங்களுக்காக
இனியும்
என்னால் சிலுவைகள்
சுமக்கவியலாது
ஆமின்
-ரிஸ்கா முக்தார்-
No comments:
Post a Comment