Thursday, May 21, 2026

தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி டி.எஸ்.சேன நாயக்கா அரசு தமிழரைப் பலவீனப்படுத்தும் முயற்சியிலீடுபட்டது.

 தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி டி.எஸ்.சேன நாயக்கா அரசு தமிழரைப் பலவீனப்படுத்தும் முயற்சியிலீடுபட்டது. அதன் முதற்படியாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மந்திரிப் பதவிகள் வழங்கப்பட்டன.

ஜி.ஜி.பொன்னம்பலம் கைத்தொழில் அபிவிருத்தி, கடற்றொழில் அமைச்சு வழங்கப்பட்டது. கே. கனகரத்தினம் (பிரதி அமைச்சர் பதவி), சி.இராமலிங்கம், வி.குமாரசாமி போன்றோர் அரசுடன் இணைந்தனர். செல்வநாயகம், (தந்தை செல்வா) வன்னியசிங்கம், சிவபாலன் ஆகியோர் அரசுடன் இணைய மறுத்துவிட்டனர். இந்நிலையில் 1948ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜி.ஜி. பொன்னம்பலம் அமைச்சராகி அரசுடன் இணைந்தார். அன்றிலிருந்து தமிழ்க் காங்கிரஸ் இரண்டு அணியாக பொன்னம்பலம் அணி, செல்வநாயகம் அணி என இரண்டாகப் பிரிந்து வேறு வேறாகக் கூட்டங்களை நடத்தத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் செனட்டராக இருந்த இ.எம்.வி. நாகநாதன், செல்வநாயகம் குழுவில் இணைந்து கொண்டார். 🔺இலங்கை தமிழ் அரசுக்கட்சி. தொடர்ந்து தமிழரசுக் கட்சி 1948, டிசம்பர் 18, ல் ஸ்தாபிக்கப்பட்டதும் தன்னிகரில்லாத் தலைவராக தந்தை எஸ்.ஜே.வி. விளங்கியதும், பின்னர் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் அன்னார் வெற்றி பெற்றதும் அனைவரும் அறிந்ததே. செல்வநாயகம் (தந்தை செல்வா) தமிழர் விடுதலைக்காக, தமிழ் மக்கள் அமைதியாக தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இறுதி வரை ஒரு சத்தியாக்கிரகியாக, ஊழலற்ற வாழ்க்கையைக் கடைப்பிடித்தார். அமரர் செல்வநாயகத்தின் தீர்க்கதரிசனமான பண்டா-செல்வா ஒப்பந்தத்தையோ அல்லது செல்வா-டட்லி ஒப்பந்தத்தையோ மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் நிறைவேற்றி இருந்தால் இத்தனை பொருள் இழப்புகள், உயிர்ச் சேதங்கள், அனர்த்தங்களை இந்த அழகிய, சிறிய நாடு தவிர்த்திருக்கும். அன்னார் தாம் காலமாகும் முன் தமது 78ஆவது வயதில் வட்டுக்கோட்டையில் சுதந்திர தமிழீழமே ஒரே தீர்வு என தீர்மானத்தை நிறைவேற்றி 79, வயதில் 1977, ஏப்ரல், 26, ல் மரணமடைந்தார் 2/2





No comments:

Post a Comment

#தமிழகத்தில்பாரதியஜனதா

#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...