Thursday, May 21, 2026

#மேற்குவங்கத்தில் நடைபெறும் சம்பவங்கள்

 #மேற்குவங்கத்தில் நடைபெறும் சம்பவங்கள் அது இந்திய மாகாணமா இல்லை வங்கதேசத்தின் பிராந்தியமா என அச்சபடும் வகையில் மோசமாகியுள்ளது சரியல்ல, நேற்று அங்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்காக சென்ற ஏழு நீதிபதிகள் உள்ளிட்டோரை அவர்கள் பணியாட்களுடன் ஒரு கும்பல் சிறைவைத்து கொடுமைபடுத்தியிருப்பது பெரும் அதிர்ச்சி

நீதிபதிகளை அக்கும்பல் பிடித்து வைத்ததைவிட பெரும் கொடுமை, அவர்களை மீட்க வழியில்லாமல் மாகாண முதல்வர் மம்தா அமர்ந்திருந்தது, அதாவது இப்படி சமூகவிரோதிகளிடம் சிக்கி கொண்ட நீதிபதிகளை மீட்க வேண்டும் என பெரிய கோரிக்கை வந்தும் மம்தாவோ அவரின் அரச காவல் அமைப்போ அசைந்து கொடுக்கவில்லை இது இதுவரை இந்திய தேசம் காணா அதிர்ச்சி, இந்தியாவின் காஷ்மீரில் கூட இம்மாதிரியான அராஜக சம்பவங்கள் நடந்திருக்கவில்லை எனுமளவில் பேரதிர்ச்சி இவ்வளவு பெரிய அராஜகத்தின்போதும் தேசிய மோடி அரசு மவுனம் காக்கின்றது, ஏதும் சொன்னால் அது பாஜக தொண்டர்களுக்கும் மேற்குவங்க மம்தா ரவுடிகளுக்குமான கலவரமாக வெடித்துவிடும் என அது அஞ்சுகின்றது, அதன் அரசியல் எப்போதும் அப்படித்தான் ஆனால் உச்சநீதிமன்றம் இதை கடுமையாக கருதி இதை செய்தவர்கள் யார், மாகாண காவல்துறை என்ன செய்தது என விசாரிக்க சிபிஐ விசாரணைக்கும் அப்படியே நிலமையினை அவதானிக்க அவசியமானால் என்.ஐ.ஏ அமைப்பை களமிறக்கவும உத்திரவிட்டுள்ளது இந்திய சட்டத்துக்கும் அதன் அமைதிக்கும் பெரும் சவால்விட்டுள்ள இச்சம்பவத்துக்கு மம்தா அம்மையார் சற்றும் பொறுப்பில்லாத, மிக திமிரான தொணியில் இது மக்கள் பிரச்சினை, அவர்கள் இந்த வாக்காளர் சீர்திருத்ததை விரும்பவில்லை என சொல்லியிருக்கின்றார் மேற்குவங்க நிலமை இவ்வளவுக்கு மோசமாகிவிட்டது பெரும் துரதிருஷ்டம், இது தேசத்தின் பெரும் மிரட்டல், அந்நிய கும்பல் ஊடுருவி இப்போது மாகாண முதல்வர் கையினையே கட்டிபோட்டிருப்பது பெரும் அதிர்ச்சி , மோடி அரசு நீதிமன்ற வழியில் மட்டுமல்லமல் இதர தேச பாதுகாப்பு விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுத்தல் அவசியம் என்பதே தேசாபிமானிகளின் கோரிக்கை

No comments:

Post a Comment

#தமிழகத்தில்பாரதியஜனதா

#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...