Wednesday, February 22, 2017

பழைய நினைவுகள்....

இன்றைக்கு (22.02.2017)நடந்த நீதிமன்ற சம்பவம் ஒன்று பழைய நினைவுகளை மனதில் கொண்டுவந்தது.
தலைவர் கலைஞர் நள்ளிரவில் மனித நேயமற்ற முறையில் ஜெயலலிதா ஆட்சியில் கைது செய்யப்பட்டபோது கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தமிழக சிறையில் இடம் இல்லாமல் அடைக்கப்பட்டனர்.
அப்போது, மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்து 48 மணி நேரத்தில் அவர்களை விடுவிக்க உத்தரவு பெற்றேன்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் டெல்லி சம்பத்தும், நானும் அலைந்து திரிந்து நவம்பர் 2003-ல் தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு மாற்றம் செய்ய உச்சநீதிமன்றத்தில் ஆணையம் பெற்றோம்.  இதை மனது சொல்ல நினைத்தது.
தலைவர் கலைஞரும்,முரசொலி மாறனும் பாராட்டியதும் உண்டு .
#கலைஞர்
#முரசொலிமாறன்
#திமுக
#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
22.02.2017

No comments:

Post a Comment

*Be yourself, none is perfect, to get everything right*.

*Be yourself, none is perfect, to get everything right*. If something goes wrong, that is completely okay, it happens. Step up to get things...