Wednesday, February 1, 2017

இன்றைய மணல் கொள்ளை காட்சிகள்

இன்றைய மணல் கொள்ளை காட்சிகள்:
------------------------------------
இந்த புகைப்படங்களை பார்த்தாலே நெஞ்சு பொருக்கவில்லை . மணல் இயற்க்கையின் அருட்கொடையால் ஆயிரம் ஆண்டுகள் திரண்டு உருவாகி நதி தீரங்களில்பள்ளிகொள்கின்றன.

கொள்ளைக்காரர்கள்,தங்களுடைய லாபத்திற்காக மனசாட்சி இல்லாமல் இப்படி மணலை கொள்ளை அடிக்கின்றனர்.திருட்டுதனமாக  மணலை  அள்ளும் கொடும்பாவிகளை தேசவிரோதிகள் என்று சொல்லி தூக்கில் போடவேண்டும் . 

சாரை சாரையாக லாரிகளில் மணலை கொள்ளையடிப்பதை பார்த்தால் வேதனையும்,ரணமும்   ஏற்படுகிறது  .தண்ணீரில் உள்ள மணலை கூட விடாமல்  நீர்  சொட்ட சொட்ட அள்ளும் இந்த திருட்டு பயல்களிடம் எந்த நியாயமும்  நேர்மையும் கிடையாது .

அள்ளிய இந்த திருட்டு மணலை  மாலத்தீவு , கேரளம்   ,  கர்நாடகம் , ஆந்திரத்திற்கு  கடத்துகின்றனர் .
அசைவ உணவு விடுதில் ஈரல் , பாயா,லெக் பீஸ் என விலை பட்டியல் இருப்பதை போல கேரளத்தில் காவிரி மணல் , வைப்பாறு மணல் , தாமிரபரணி மணல் என பட்டியல் போட்டு விலைக்கு விற்கும் கேவலமான நிலைக்கு தள்ளியவர்களை சட்டமும் அரசும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றது. 

விதியே விதியே தமிழ் சாதியே.....

#மணல்கொள்ளை
#KSRadhakirushnanpost #Ksrposting 

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
28/01/17





No comments:

Post a Comment

*Be yourself, none is perfect, to get everything right*.

*Be yourself, none is perfect, to get everything right*. If something goes wrong, that is completely okay, it happens. Step up to get things...