Friday, February 24, 2017

விவசாயிகள் தற்கொலைகள்

சுட்ட வார்த்தைகள்....
எமை சுட்ட வார்த்தைகள்
ஒவ்வொரு வரியை வாசிக்கும் போதும் வலியை உணர்ந்தேன்..

நம்ம வீட்ல ஒரு உயிர் போனாதான் நமக்கு அந்த கஷ்டம் புரியுமா?

மீடியா ஏன் இதப் பத்தி பேசல... 

சமீபத்துல டில்லியில நடந்த விவசாயி தற்கொலை பத்தி கூட ரெண்டு நாள் பேசிட்டு அப்படியே விட்டுட்டாங்க.

ஒவ்வொரு 30 நிமிசத்துக்கும் ஒரு விவசாயி சாகுறாங்களாம்.

சராசரியா வருசத்துக்கு 15,459 விவசாயிகள் தற்கொலை செய்திருக்காங்க

போன 20 வருசத்தில 3,10,382 விவசாயிங்க தற்கொலை செய்திருக்காங்க

1995-10,720
1996- 13,729
1997-13,622
1998- 16,015
1999- 16,082
2000- 16,603
2001- 16,415
2002- 17,971
2003- 17,164
2004- 18,241
2005- 17,131
2006- 17,060
2007- 16,632
2008- 16,796
2009- 17,368
2010- 15,964
2011- 14,027
2012- 13,754
2013- 11,744
2014- 12,141
2015(Jan-April)- 1,203

இப்படியே போச்சுன்னா அடுத்த தலைமுறை என்ன பண்ணுவாங்க?

 தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை, கவலையின் காரணமாக 200பேர் வரை மரணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இந்த அசாதாரண நிலை 2012க்கு பின் ஏற்பட்டது. 1972லிருந்து 1992 வரை 75 விவசாயிகளுக்கு மேல் போராட்டத்தில் காவல் துறையால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட போராட்ட களங்கள் 1960 கால கட்டங்களிலே துவங்கிவிட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர் காலத்தில் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் போராடிய கடம்பூர் விவசாயி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுதந்திரப் போராட்டட காலத்தில் வங்கத்தில் அவுரி விவசாயிகள், கேரளத்தில் மாப்பிளா என்ற விவசாயிகள் போராட்டம் வரலாற்றில் இன்றைக்கும் நினைவில் இருக்கின்ற நினைவுகள் ஆகும்.

இந்த இரு போராட்டங்களும் உத்தமர் காந்திக்கு மேலும் போராடும் வேகத்தை வழங்கியது.
இதுவரை இந்தியாவில் 5 இலட்சம் விவசாயிகள் தற்கொலையாலும், மனம்உடைந்தும் மறைந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்கள்கூட சொல்கின்றன.

விவசாய இனமே அழிஞ்சு போனா நம்ம நாட்டில என்ன மிஞ்சும்?

நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உண்ணகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....

நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....
பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....
#விவசாயிகள்தற்கொலை
#விவசாயம் 
#agriculture
#farmerssuicides
#ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
24.02.2017

No comments:

Post a Comment

Meenanbakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup #Panakotai Maheswaran #Kathersan

Meenambakkam old airport bomb blast1984,now cargo #TEAGroup  #Panakotai Maheswaran #Kathersan 1) https://www.thehindu.com/news/cities/chenna...