அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..
அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு....
பின் ஜப்பான்,
இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு
கார் ரேஸ் என…..
ஆனால் எங்களுக்கு மட்டும் என்றைக்கு கிடைக்குமோ பாதுகாப்பு
அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு..
அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு....
பின் ஜப்பான்,
இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு
கார் ரேஸ் என…..
ஆனால் எங்களுக்கு மட்டும் என்றைக்கு கிடைக்குமோ பாதுகாப்பு
#நெல்லை_டே!!
#Tirunelveli_day
என்னடே எல்லாவனும் ஊர்பெருமை பேசறியோ!
சென்னைடே, கோவைடேன்னு கொண்டாடுதியோ!!
எங்க திர்னேலி அல்வா ஏன் இம்புட்டு ருசியா இருக்கு தெரியுமா! சொல்லுதேன் பாருலே!
அல்வாக்கு ருசியே அதை நைசாட்டு கிண்டுத பதம்தான்.
பாலு, கோதும, சீனி நெய்யி இதையெல்லாம் ஒரு அண்டால தாமிரபரணி நீரை வச்சு எங்க ஊர் ரோட்ல ஆட்டோல ரெண்டு தடவை போனோம்னாய்க்கி நெல்லையப்பர் கோவில் வாசலுக்கு போறதுக்குள்ள அண்டால அல்வா தானே கலந்துகிடும்டே!
இதாம்டே தொழில் ரகசியம்!!
கோட்டிக்காரனாட்டு வெளியே சொல்லிடாதே.
#ksrpos
31-8-2024
தொலைதூரம் தொலைந்த வானம்,
தொலைந்த வாழ்க்கை,
தொலைந்து போன கனவு.
தொலைந்த பார்வை தீராத ஏக்கம்.
தொலைந்த ஒட்டிய உறவு,
பரந்து விரிந்த வாழ்க்கை
நொந்து கடக்கும் மனிதம்
என்ன நினைந்து என்ன? ஒன்று கூடிப் பேசிக் கலந்து உள்ளப் பிரிதல் கவலை கூடும் பண்பு தானே!
நாளை திரும்பும் வாழ்க்கை ஒவ்வொரு முடிவுக்கு பின்பும் ஒரு புதிய ஆரம்பம் உள்ளது..
தேவையற்ற இடங்களில்
பிம்பங்களை சுமக்காதீர்கள்.
நீங்கள் உடைந்து விடுவீர்கள்........!
பை பை ஆகஸ்ட்
---------------------------------------------
வாழ்க்கையில் நிறைய அனுபவப்பட்டப் பிறகு தான் தெரிகிறது யாரோடும் யார் வாழ்க்கையும் முடிந்து போய் விடுவதில்லை.
அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்தேயாக வேண்டும்.இது தான் வாழ்க்கை.நாம் கொண்டு வந்தது எதுவுமில்லை.கூட வரப்போவதும் எதுவுமில்லை.
ஆகவே எதன் மீதும் அதிகப் பற்றுதல் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.ஏனெனில் பற்றுதல் துன்பத்தைக் கொண்டு வருகிறது.
வாழ்க்கை என்பது ஒருமுறை கிடைக்கும் சலுகை. அதைக் கவனமாக செலவு செய்வதே சிறந்தது.
சில நேரங்களில் வாழ்க்கையில் .நாம் செய்யும் தவறுகளும் தான். அதனால் சிந்திக்கும் போது நிதானமாக சிந்தியுங்கள்.
செயல்படும் போது உறுதியோடு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்
ஆடுகளங்கள் மாறலாம்
உன் போராட்டம் ஓயாதென
புரிந்துகொண்டு
கலங்காதிரு மனமே...
உன் மீது புறணிகள் ஓயாதென...
உன்னாற்றல் பற்றியோ
உன்னெழுத்து பற்றியெல்லாம்
அக்கறையில்லை எவருக்கும்
உன்னொழுக்கம் காக்க
கங்காணிகள் இருக்கிறார்களென்று...
சுயமுமும் சுதந்திரமும்
உன் கேடயங்களென
கேட்பவருக்கு உரைத்து
கேள்வியைத் திருப்பு...
உன் சுதந்திரம் என்பது
உனக்கானவை மட்டுமே
எவரும் நுழைந்து
எதிர் கருத்திட இடமில்லையென்று பரப்பு...
இந்தியாவில் அமைதி பேச்சு:
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டம்
கீவ் : ரஷ்யாவுடனான போரை நிறுத்த இந்தியாவில் அமைதிப் பேச்சு நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டமிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் நடத்தவும் முயற்சிகளை அவர் மேற்கொண்டுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர, சுவிட்சர்லாந்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த முதல்கட்ட அமைதி பேச்சு தோல்வி அடைந்தது.
இம்மாதம் பிரதமர் மோடி, ஜெலன்ஸ்கியை உக்ரைனில் சந்தித்து பேசிய பின், இந்தியாவில் இரண்டாம் சுற்று அமைதிப் பேச்சு நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர ஜெலன்ஸ்கி விரும்புவதாக கூறப்படுகிறது.
பசும்பொன் தேவரின் தீவிரமான போராட்டத்தின் விளைவாக மதராஸ் மாகாணத்தின் முதல்வரான இராஜாஜி அவர்கள் கைரைகைச் சட்டத்தை ரத்து செய்த தினம்
#திருநெல்வேலிதினம் | #TirunelveliDay ! ஆகஸ்ட் 31
பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி தந்த திருநெல்வேலி
...
#திருநெல்வேலி #tirunelveli #tirunelvelian #tirunelvelijunction #tamilnadu #தமிழ்நாடு
#tirunelveliday #tirunelveli #tirunelvelian #Tirunelvelidistrict
#ksrpost
31-8-2024.
Success comes to those who dedicate everything to their passion in life. Devotes yourself to a cause with your whole strength and soul so you can be a true master. Success cannot be developed in ease and quiet. Only through experience of trial and suffering can the soul be strengthened, ambition inspired, and success achieved. Understand all the adversity you have in your life, all your troubles and obstacles, would have strengthened you. You may realize it when success happens. Also know that to be successful, it is also very important to be humble and never let fame or money travel to your head....
#ksrpost
31-8-2024.
என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு
வானம் பார்த்த கந்தக மண்
என் நிலத்தில் வாழை
The beauty of village.
The beauty Of nature
Love of everything village
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
31-8-2024.
Tomorrow 31-8-2024…Evening 5.45.
#Untold_stories
#Framing_of_theConstitutionofIndia
நாளை சனி 31-8-2024,மாலை நிகழ்வு - 5.45.
#இந்திய_அரசியல்சாசனம்வரைவு_வரலாறு…
பங்குகேற்க வாரீர்!
#Untold_Stories
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
30-8-2024.
இன்றைய வாழ்க்கையானது சரி, தவறு, நெறிமுறைகள், கொள்கைகள், உயரிய கருத்துக்கள் போன்றவற்றால் நிர்வகிக்கப்படுவதில்லை.மாறாக அதிகாரம், பலம், பலவீனம், புத்திசாலித்தனம், முட்டாள்தனம், தகவமைப்பு, அழிவு போன்றவற்றாலேயே நிர்வகிக்கப்படுகிறது. உங்கள் உரிமைகளைப் பெற, நீங்கள் வலிமை, புத்திசாலித்தனம் மற்றும் யதார்த்தத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் பல மில்லியன் கணக்கான ஆண்டுகளாக ஒருவரையொருவர் உடல் ரீதியாக வேட்டையாடும் உயிரினங்களிலிருந்து, இன்று பொருள் ரீதியாக, மனரீதியாக, உளவியல் ரீதியாக மற்றும் சட்டப்பூர்வமாகவும் ஒருவரையொருவர் வேட்டையாடும் உயிரினங்களாக பரிணமித்துள்ளோம்.
சண்டாளன் என்பது அவதூறு என்பது பார்ப்பான் என்பது அவதுறு;சூத்திரன் என்பது அவதூறு; சாணார் என்பது அவதூறு;வேடன் என்பதும் அவதுறுதான்! ஆனால் இவை சாதிப் பெயர்கள்.வடுகன் என்பதும் இதில்தான் வரும்.வடுகன் தீவிர தமிழ் தேசியர்கள் பயன்படுத்துகின்றனர்
•••
இந்த சமூக வலைத்தள உலகம் இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் எளிதாக காட்டிவிடுகிறது, எந்த ஒன்றினதும் உண்மைத் தன்மைகளை ஆராயாமல் தட்டச்சு செய்தும், பிரதி செய்தும் பதிவுகளை இடுகின்ற அதிகப் பிரசங்கித்தனமும் முன் முடிவுகளும் தனிமனித துதிபாடல்களும் இன்றைய இளைய சந்ததிகளின் சாபம் என்பேன்.
எதுவாகினும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தியுங்கள், ஆராய்ந்து செயற்படுங்கள். அனுபவத்தில் மூத்தவர்களோடு உரையாடுங்கள், இல்லையா அமைதியாக பொறுத்திருங்கள். நீங்கள் பகிருகின்ற கருத்துக்கள் சமூக மட்டத்தில் ஏற்படுத்துகிற விளைவுகள் குறித்து விழிப்போடு இருங்கள்.Sharmila Vinothini Thirunavukarasu
•••
1. சான்ஸ் கிடைக்கும்போது சும்மா இருந்துட்டு இப்ப துள்ளிக் குதிச்சு கம்பிளெயிண்ட் கொடுக்கிறாங்க.
2. அதிர்ஷ்டக்கார ஹீரோக்கள்டா, அனுபவிச்சாங்க.
என்ற இரண்டு விதமான ஆண்திமிர் வெளிப்படுகிறது.
நியாயமாக ஒரு நடிகனைப் போலவே சினிமாவில் நடிப்புத்தொழில் செய்யத்தான் அந்த நடிகைகளும் வந்தார்கள். அந்தப் பெண்களுக்கு மிகப் பெரிய துன்பம் கொடுக்கும் தொல்லை செய்த கிராதகர்களை விட்டு விட்டு அந்தப் பெண்களைப் பற்றிப் புறம் பேசுவதை எதில் சேர்ப்பது?
எத்தனை விசாகா கமிட்டி, ஹேமா கமிட்டிகள் வந்தாலும் இவர்கள் மனதில், இல்லை இல்லை இவர்கள் கால்களுக்கிடையில் இருக்கும் மனதின் அழுக்கை வெளுக்க முடியாது. இதுதான்
இன்றைய சூழல்
•••
ஒரு படத்தைப் பார்க்கப் போறவங்க எல்லா தரப்பு ரசிகர்களும்தான்.
அப்படிப் போய்ப் பார்க்கறவங்க நல்லாயிருக்குன்னு சொல்லி,
கோடி கோடியா இலாபம் வந்தா சந்தோஷமா ஏத்துக்கறது,
அதே அந்தப்படம் அவ்ளோ நல்லாயில்ல,குறையிருக்குன்னு சொன்னா உடனே சங்கீங்கறது,மங்கீங்கறது,
"நீ உசந்த ஜாதிக்காரன்,
அதான் இந்தப்படம் புடிக்கலைன்னு சொல்றேன்னு என
ஜாதிச்சாயம் பூசறது"ன்னா
அது என்ன மாதிரியான மனநிலை ?
அப்படி ஒரு சாராருக்கு மட்டும்தான் படம் எடுத்திருக்காங்கன்னா,
டைட்டில்லயே போட்டுட வேண்டியதுதானே ?
இது அவங்களுக்கான படம்,
அவங்க மட்டும் பார்த்தா போதும்,
காசு கொடுத்தாலும்,மத்தவங்களுக்கு அனுமதி இல்லைன்னு முன்னறிவிப்பு செஞ்சிடலாமே,அதைவிட்டுட்டு,
எப்பப்பாரு ஜாதி ஜாதின்னு வம்பு வளர்க்கறதும் நல்லாவா இருக்கு ?
https://youtu.be/sFAs5LUS45k?si=JQBMH-Fa56oiT83I
@KanimozhiMathi
அழுதழுது ஓய்ந்தடங்கிய
துக்க வீட்டின் நீளமைதி
போலிருக்கிறது
இந்தப் பிரிவின்
வலி …..
ஆணின் அரவணைப்பில்
சூழப்பட்டு இருக்கும்
பெண்ணின் உலகம் மிக
அழகானது...!!
பெண்ணின் அன்பினால்
சூழப்பட்டு இருக்கும்
ஆணின் உலகம் மிக
பேரழகானது....!!!
தேடிக்கொண்டு வாழ்வதைவிட
வாழ்ந்து கொண்டே தேடலாமே...
வாழ்க்கை பயணம் இனிதாகும்...
காத்திருக்க கற்றுக் கொள்
ஒற்றைக்காய் போதும் களம் ஆட.
ஒட்டு மொத்தமாக
ஆட்டத்தை முடிக்க.
Be yourself and be strong that nothing can disturb your peace of mind. Look at the sunny side of everything & make your optimism come true. Think only of the best, work only for the best & expect only the best. Forget the mistakes of the past & press on to the greater achievements of the future. Give much time for the improvement of yourself that you have no time to criticize others. Live in the faith that the whole world is on your side as long as you are true to the best that is in you...
#ksrpost
30-8-2024.
என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு
வானம் பார்த்த கந்தக மண்
மாட்டு வண்டி பட்டறை
The beauty of village.
The beauty Of nature
Love of everything village
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
30-8-2024.
#என்நிலை_எனதுபாடுகள்
———————————-
எனக்குள் இருந்த ஏதோ ஒரு இயல்பு நான் அரசியலுக்கு வர காரணமாயிருந்தது. பிறர், நான் இதில் சிலரின் வஞ்சகத்தால் வெற்றி பெற வில்லை என சொல்கின்றனர். ஆனால் இதன் தளத்தில் நான் வெற்றியை ஈட்டிய மகிழ்ச்சியான சுதந்திர தனி மனிதனாக இருக்கிறேன்.
உங்களுக்குள் இருக்கும் மனிதனை மற்றும் சூழலை உணர்ந்து கொள்ளுங்கள். போகுமிடம் இலக்கும் வெகுதூரமில்லை. இதுவே எனது இருத்தல் இயல்.
••••
விழிப்பாக இருங்கள். ஆனால் மிகவும் பயனுள்ளவராக இருக்காதீர்கள். இல்லையெனில் மக்கள் உங்களைப் பயன் படுத்திக்கொள்ள துவங்கி விடுவார்கள். அதன்பிறகு அவர்கள் உங்களைக் கையாளவும், நிர்வகிக்கவும் தொடங்கி விடுவார்கள். பிறகு உங்களுக்குத் தொந்தரவுதான்.
உங்களால் பலன் கொடுக்க முடிகிறது என்றால்... உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் பலன் கொடுக்கவேண்டும், என்று எதிர்பார்க்கப் படுவீர்கள். எதிர்பார்ப்புகள் இறுதியில் வற்புறுத்தலில் தான் முடியும்.
உங்களால் சில குறிப்பிட்டவற்றைச் செய்ய முடிகிறது என்றால்... நீங்கள் அதிக சாமர்த்தியமுடையவராக, மிகுந்த திறமையுடையவராக இருக்கிறீர்கள் என்றால்... இந்த சமூகத்தினால், உங்களின் ஆக்கம் (Output) வீணாக்கப்பட முடியாது.
நீங்கள் அடுத்தவர்களுக்குப் பயனுள்ள ஒருவராக இருக்க முடிந்தால்... பிறகு, நீங்கள் அடுத்தவருக்காகவே வாழவேண்டும் என்று எதிர்பார்க்கப் படுவீர்கள். ஆனால் பயனற்றவாராக இருந்தால்.... யாரும் உங்கள் "இருத்தலை" (presence) திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்!! உங்களை கண்டுக்கொள்ளவும் மாட்டார்கள்!!
உங்களின் குடும்பத்தினரால்.... இந்த சமூகத்தால்.... நீங்கள் தனித்து விடப்படுவீர்கள்!! இங்கு "'பயனற்ற தன்மை" (Futility) என்பது தனக்கே உரிய இயல்பான சில பயன்களையும்" பெற்றுள்ளது.
அதன்பின், நெரிசலான சந்தைப் பகுதியில் கூட நீங்கள் இமயமலையில் இருப்பதைப் போல் உணர்வீர்கள். அந்த தனிமையில் உங்களின் தியானத் தன்மை வளரும். உங்கள் முழுச் சக்தியும் உள்நோக்கிச் செல்லும்..... நீங்கள் மேலும் உங்களின் அசல் "இருப்பை" நோக்கி செல்வீர்கள்!!
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
29-8-2024.
சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
சில அவமானங்களால் தனிமையில் நீ கற்கும் பாடங்களே வாழ்க்கையில் உயர்ந்திட நல்ல வழிவகுக்கும்.
கீழே விழுவதை அவமானமாக எண்ணாதீர்கள். அப்போதுதான் உங்களை தூக்கி விடுபவர் யார், தூரம் நின்று ஏளனப்படுத்துபவர் யார் என்று தெரியும்.
பேசி சாதிப்பதை விட அமைதியாய் இருந்து சாதியுங்கள். உங்கள் அமைதி யாரையும் உங்கள் அருகில் வர
பயமுறுத்தும்.
வலிகளை தாங்கும் பொறுமையும் அதை கடந்து செல்ல சிறு புன்னகையும் இருந்தாலே போதும் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
விடை தெரிந்த கேள்விகளுடன் துணிவதல்ல வாழ்க்கை,விடை தெரியாத
கேள்விகளுக்கும் விடை சொல்ல துணிவதே வாழ்க்கை…
அமெரிக்கா சென்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு...
ஸ்டாலின் இரண்டரை வாரங்கள் அமெரிக்காவில் இருப்பார். பல்வேறு முதலீடுகளை தமிழ்நாட்டை நோக்கி கொண்டு வருவதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.
அதிர்ந்த அமெரிக்கா...🗽
அரண்ட ஜோ பைடன்...
சரி, வரவேற்பு கொடுத்தது யாரு? அமெரிக்க அரசா?
இங்கிருந்து அழைத்து சென்ற உறுப்பினர்களும், கோட்டு சூட்டு போட்டு இருக்கிற அங்கு உள்ள ஊபீகளும் இணைந்து வரவேற்பு கொடுத்தார்கள்...
உண்மையிலேயே இது வரை வெளிநாட்டுக்கு மூன்று சென்ற முதல்வர்-முதலீட்டாளர்களை சந்திப்பில்
நடந்த விளைவுகள் குறித்த வெள்ளை அறிக்கை வேண்டும்.
எதிர்கட்சியாக திமுக இருந்த போது இதே ஸ்டாலினை 2012 ஆகஸ்ட்டில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் (London) நான் அழைத்து சென்று பேச வைத்தேன்.
இதை இன்று ஸ்டாலின் மற்ற திமுகவினர் வசதியாக நினைவில் இருக்காது.
ஆழ்நிலை
ஆனந்தப் பிரவாகமோ அமைதியாய் குறுநகை சிந்துகிறது உன் உதடுகள். திலக மௌனம் கலைக்க காம்போதி மீட்டுகிறது கணையாழி. பேதலித்து நிற்கிறேன் தூர எங்கேயோ நான்.!அன்று துபாய் முதலீடு ஈர்ப்பு.. அப்புறம் சிங்கப்பூர் முதலீடு ஈர்ப்பு.... பின் ஜப்பான், இப்போது அமெரிக்கா முதலீடு ஈர்ப்பு கார் ரேஸ் என….. ஆன...