Thursday, September 19, 2024

ஒரு பெண்ணின் உடல் வேண்டுமானால் அவளிடம் நேரடியாகக்

 ஒரு பெண்ணின் உடல் வேண்டுமானால் அவளிடம் நேரடியாகக் கேட்கவேண்டும். ஆரம்பத்திலேயே கேட்கவேண்டும். அதுதான் நோக்கம் என்பதை தெரிவித்திட வேண்டும். அவள் அங்கேயே மேற்கொண்டு தொடர்வதா வேண்டாமா என்பதை முடிவுசெய்துவிடுவாள். அதல்லாது தக்கசமயம் வரும்வரைக்கும் காத்திருந்து கேட்கும் போது அவளிடம் பழகுவதற்கான நோக்கம் இங்கு உடல்வேண்டலாகவே ஆகிறது, 






















காலப்போக்கில் தானே அவள் மீது அபிப்ராயம் வரும் அதன் விளைவான அழைப்பு தானே அது. அதிலென்ன தவறு என்றால் ஆமாம் தவறுதான். காலப்போக்கிலான அபிப்ராயம் காதலாக இருக்குமே அன்றி உடல்சார் தேவைக்கு காலமும் தேவையில்லை அபிப்பிராயமும் தேவையில்லை. நான் இங்கு பேசுவது எதிர்காலமற்ற fling relation பற்றி மட்டுமே! அது பெண்களில் சிலருக்கு தேவைப்படும் சிலருக்கு தேவைப்படாது. எந்த பெண்ணிடம் என்றாலும் ஆரம்பத்திலேயே தெரிவிக்கப்படும் போது அதை ஏற்கவோ நிராகரிக்கவோ ஒதுங்கிச் செல்லவோ அவள் முடிவெடுப்பாள். ஆனால் தக்க சமயத்திற்கு காத்திருந்து வெளிப்படுத்தும் போது அவள் உடலை நிச்சயமாக அடைய முடியாது. அது தோல்வியில் தான் முடியும். ஏன் தெரியுமா? நீ அவளின் உடலை அல்ல அவளின் மனதை அவமானப்படுத்தி விடுகிறாய். அவளின் இத்தனைய நாளின் பேச்சு சிரிப்பு அறிவு எல்லாவற்றையும் அவமானப்படுத்தி விடுகிறாய். அவமானப்பட்ட பெண்ணின் புறக்கணிப்பு உக்கிரமனாது.

எல்லாம் இந்த உடலால் தானே என்றெண்ணி உடலைக் கிழித்துக்கொண்டு வெளியேற எண்ணும் அவளுக்குள் இருக்கும் தேவதை 

உடலென்னும் திரைக்கு பின்னால் இருக்கும் தேவதை, தன்னை நீ கண்டுகொள்ளவில்லை என்று அழும். 


தேவதைகளைக் கண்டுகொள்ளுங்கள்.

அற்புதமானவர்கள்!

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...