Thursday, September 19, 2024

அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றால் எப்படி முடியம்⁉️

 அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றால்  எப்படி முடியம்⁉️தேர்தலில் ஓட்டு விற்பனை, லஞ்சம், மதுவே உலகம், போதை பொருள்கள் பள்ளி முதல் விற்பனை…



அனுபவம் ஒருபோதும்,

அன்பாக சொல்லித்தருவதில்லை..!!


தீதும் நன்றும் பிறர் தர வாரா:ஊழ்வினை வந்து உறுத்தும்; அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். இவையெல்லாம் இந்த தேசத்தின் தொன்மைச்சிந்தனைகள். நீங்கள் சொல்லும் சனாதனம். இவற்றைக் கூறும் நூல்கள் எவை தெரியுமா? அவற்றை என்ன செய்வீர்கள்? கொளுத்திவிடுவேர்களா!


இறைவன்,மறு பிறப்பு பற்றி பேசிய வள்ளுவரை என்ன செய்யப் போகிறார்களோ?


நாலாந் தலை முறையும் ஆழ்வதற்குத தயார் என்றால் இவர்களை விட தகுதி வாய்ந்த படித்தவர்கள் நாட்டில் இல்லையோ தமிழர்களை  ஆழ்வதற்கு.

இப்பொழுது தெரிவு செய்யப்பட் ஈழத்து தமிழ் வம்சாவழியான  சிங்கப்பூர்

அதிபர்  எவ்வளவு படித்தவர் திறமைசாலி உலக பல அமைப்புகளுடன் 

தொடர்புடையவர்  அனுபசாலி தம் உழைப்பால்  சேர்த்த  சொத்து அவர்கள் நாட்டு பணத்தில் 67 கோடிகள் மதிப்பாகலாம்  எனச்  செய்திகள் கூறுகின்றன அப்பேற் பட்டவர் நாட்டின் அதிபர் ஆகப் போகின்றார் என்பது நாட்டிற்குப் பெருமையும் நன்மையும் ஆகும் . 

இங்கு வாரிசு  என்பதே ஆழ்வதற்கு தகுதி ஆக்கி வைத்துள்ளனர் . அவருக்கு என்ன தகமை இருப்பது என்பது கேள்வியே  இல்லை. அடிமை சாசனம் தான் .

மீட்சி எப்போ ??


இந்நிலையில் அறிவார்ந்த சமூகத்தை எப்படி உருவாக்க முடியும்…❓


#வாழ்வியல்


#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

8-9-2024.

No comments:

Post a Comment

ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu

#ஆந்திர  துணைமுதல்வர்  பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு  #Meeting with  AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...