Thursday, September 19, 2024

#செந்தில்பாலாஜிக்கு காலம் முழுக்க சிறை வாழ்க்கை தானா⁉️ அவர் நிலை…❓

 #செந்தில்பாலாஜிக்கு காலம் முழுக்க சிறை வாழ்க்கை தானா⁉️

அவர் நிலை…❓

அவரின் தம்பி அசோக் வந்து சரணடையாம பாலாஜிக்கு ஜாமீன்⁉️


திமுக வக்கீல் அணியின் team இன் தவறான செயல்பாடுகளால் இப்பொழுது  செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது கடினம் போல தோன்றுகிறது .. முறையான கைதி  என்ற நிலையி்ல் ஆட்கொணர்வு மனு அல்லது ஹேபியஸ் கார்பஸ் (Habeas corpus) தவறாக தாக்கல் செய்த போதே சிக்கல் ஆரம்பித்து விட்டது.  Wrong legal advice. முதல்வர் ஸ்டாலின், அவரின் அமைச்சர்கள் உட்பட கைதி செந்தில்பாலாஜியை சந்தித்தது குற்றம். இதே மாதிரி  மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் சேலம் சிறையில் குற்றவாளியான அவர் உறவினர்

பாறைப்பட்டி சுரேஷ்யை அமைச்சராக சந்தித்த விடயம் சிக்கலானது. மத்தியில் திமுக கூட்டணி காங்கிரஸ் ஆடசி எனவே இதில் மேல் நடவடிக்கை  அன்று இல்லை.


செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட அன்று, அமைதியாக சம்மனை வாங்கிக் கொண்டு இருந்தால் கைது நடவடிக்கையே இருந்திருக்காது ..

சரி அப்படியே கைது செய்த பிறகும், ரிமாண்ட் செய்யப்பட்டால் ஜெயிலுக்கு செல்ல வேண்டுமே என்ற நிலையில் அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. 


அப்படியே அவருக்கு உண்மையிலேயே அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்திருந்தால் கூட உயர் நீதிமன்றத்தில் பெயில் மனு செய்திருக்க வேண்டும்.


ஆனால் அவர்கள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது மிகப்பெரிய தவறு ..

ஏனென்றால் ரீமாண்ட் செய்யப்பட்ட கிழமை நீதிமன்றத்தில் பெயில் அப்ளை செய்து விட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்ட பின் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது ..


மீண்டும் செந்தில் பாலாஜி தரப்பு பெயில் அப்ளை செய்வதற்கு பதில் , செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது,  அமலாக்கத் துறைக்கு கைது செய்ய  அதிகாரம் கிடையாது. 41A நோட்டீஸ் கொடுக்கவில்லை என்று வாதத்தை மாற்றியது தான் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு. 


அமலாக்கத்துறை கைதின்போது 41 ஏ நோட்டீஸ் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது என்று கூட தெரியாத திமுக வழக்கறிஞர் அணி 


இதைத்தான் மூன்றாவது நீதிபதி  கார்த்திகேயன் நீதிமன்ற காவலில் இருக்கும் ஒருவருக்காக கீழமை நீதிமன்றத்தில் பெயில் அப்ளை செய்து அது தள்ளுபடி செய்தபின்,  எப்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம் என்று கேட்டார் ..


இதற்குள் ஒரு மாதம் ஓடி விட்டபடியினால் மேல்முறையீட்டு மனுவுக்காக செந்தில் பாலாஜி தரப்பு உச்ச  நீதிமன்றம் செல்ல வேண்டியதாகிவிட்டது..

மேலும் உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி  கைது சட்ட விரோதமானது அல்ல. அமலாக்க துறைக்கு கைது செய்ய அதிகாரம் உள்ளது. அமலாக்கத் துறைக்கு காவலில் எடுக்க அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தது. அமலாக்கத்துறை காவல் விஷயமாக கீழமை நீதிமன்றமே முடிவு எடுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவல் கொடுத்தது கீழமை நீதிமன்றம். 

இங்கேயும் கோட்டை விட்டது செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் அணி ..

ஐந்து நாட்களில் இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று தான் எதிர்பார்த்தது திமுக  வழக்கறிஞர் அணி.


அமைதியாக பொறுமையாக செந்தில் பாலாஜி இடம்  விசாரித்த  அமலாக்கத்துறை குறிப்பிட்ட ஐந்து நாட்கள் காவல் முடிவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது ..


அப்பொழுதுதான் அமலாக்கத் துறையின் நுட்பமான அறிவு வெளிப்பட்டது ...

ஆம் யாரும் எதிர்பாராத வண்ணம் 130 பக்க குற்றப்பத்திரிக்கையும்,  3000 பக்க ஆவணங்களையும் அதே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது ..


பி எம் எல் ஏ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது  நீதிமன்ற காவலில் இருக்கும் பொழுதே 60 நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டால் குற்றம் சட்டப்பட்டவருக்கு ஜாமீன் கிடைக்கவே கிடைக்காது ..


இன்று தானே கஸ்டடி முடிகிறது. மேலும் அதிக நாட்கள் கேட்பார்களா கஷ்டடி ..

இல்லை இவர் அமலாக்க துறையிடம் என்னென்னவெல்லாம் சொல்லி இருப்பாரோ என்று தான் எதிர்பார்த்து இருந்தது திமுக


அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை கஸ்டடி எடுத்ததே அவரிடம் இருந்து ஒரு விஷயமும் பெறுவதற்கு அல்ல.. அவர்களிடம் தான் ஏற்கனவே எல்லா ஆவணங்களும் உள்ளனவே ..

உச்ச நீதிமன்றம் சொல்லியது போல அமலாக்கத்துறை க்கு கஸ்டடி எடுக்க உரிமை உள்ளது என்பதை நிரூபிக்கத்தான் ..


நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அதே நாளில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என்று திமுக வழக்கறிஞர்கள்  சிறிதும் எதிர்பார்க்கவில்லை..

அமலாக்கத்துறை காவல் முடிந்து மேலும் ஒரு சில மாதங்கள் கழித்து தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என்று ஏமாந்து விட்டார்கள் ..


சென்ற வருடம் ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் 60 நாட்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதியோடு முடிந்தது. அமலாக்கத் துறையின் காவலும் ஆகஸ்ட் 12ம் தேதியோடு முடிந்து.1/2

இங்குதான் அமலாக்க துறையின் மதிநுட்பம் வெளிப்படுகிறது ..

யாரும் எதிர்பாராத வண்ணம்  3000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களோடு குற்ற பத்திரிகையை அமலாக்கத் துறை காவல் முடியும் ஆகஸ்ட் 12  அன்றே, அதாவது கைது செய்த 60 ஆம் நாளே தாக்கல் செய்து விட்டார்கள் ..


அதனால்தான் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலில் இருக்கும் பொழுதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட விட்டபடியினால் கடந்த ஒரு வருட காலமாக ஜாமீன் கிடைக்கவில்லை..


இன்று, 2-9-2024 செந்தில் பாலாஜி வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையை சுப்ரீம் கோர்ட்டே நேரடியாக கண்காணிக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பாலாஜி தாக்கல் செய்த அந்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி வழக்கை கீழமை நீதிமன்றம் விசாரிக்கும் போது உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும். விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது என அவ்வப்போது அறிக்கை பெற்று மேற்பார்வை செய்ய முடியும்

செந்தில் பாலாஜி வழக்கை விரைவுப்படுத்த தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவது ஏன்? செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, வழக்கின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணைக்கு ஒப்புதல் .


கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் 6 மாதமாக காலம் தாழ்த்தியது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது தமிழக அரசு, செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றது.2/2

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...