Thursday, July 28, 2016

ஞானகூத்தன்

ஞானக்கூத்தனுக்கு இறுதிவிடை கொடுத்துவிட்டு சற்றுமுன் திரும்பினேன். ஞானக்கூத்தன் வீட்டின் முன் பிரபஞ்சன் உட்பட பத்துப்பதினைந்து பேர் நின்றுகொண்டிருந்தார்கள். எனக்கு பாரதி இறுதி ஊர்வல காட்சி நினைவுக்கு வந்தது. ஞானக்கூத்தன் வீடிருந்த ஈஸ்வர லால்  தெருமுனையில் உச்சிவெய்யிலில் நின்றுகொண்டிருந்தபோது யாரோ மைக்கை நீட்டி ' ஞானக்கூத்தனை பற்றி சொல்லுங்கள்" என்றார். என் குரல் உடைந்தது - Pudu elathu Manonmani 
------------------------------------------------
நவீன தமிழ் கவிதைகளின் முன்னோடி ஞானகூத்தன் சென்னையில் காலமானார் அவருக்கு வயது 78.

சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வந்த ஞானகூத்தனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.நேற்று அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். மயிலாடுதுறை அருகே உள்ள திரு இந்தளூரில் பிறந்த ஞானகூத்தன் பொதுப்பணிதுறை அதிகாரியாக பணியாற்றினார். பின்னர் தமிழின் மீது கொண்ட பற்றால் விருப்பு ஓய்வு பெற்று தமிழ் கவிதை தொகுப்புகள் , ஆய்வு கட்டுரை உள்ளிட்டவைகளை எழுதினார். 
               ------------

...திடுக்கிட்டுத் திடுக்கிட்டு நகர்ந்த முள்
ரயிலின் புறப்பாட்டு நேரத்தைத் தொட்டது.
சென்ட்ரல் ஸ்டேஷன் ரயில் நிலையத்தில்
சிந்திய எனது கண்ணீர் உன்னை மறைக்கிறது.
இரயிலின் கடைசிப்பெட்டியின் பின்புறம் போல்
சோகம் தருவது உலகில் வேறேது?
- ஞானக்கூத்தன்
         ---------------------

No comments:

Post a Comment