Wednesday, January 24, 2018

மனோன்மணியம் சுந்தரனார்...

மனோன்மணியம் சுந்தரனார்...
சமயம் பணிக்கு
வந்தவர்கள் 
தமிழை வணங்கிக் கற்றார்கள்.
தமிழ்த் தாய் வாழ்த்திற்கு மரியாதையளிக்க மறுக்கும் நபரை மதிக்கலாமா தமிழர்கள்?
.........
சேக்ஸ்பியரின் நாடகங்கள் போன்று மனோன்மணீயம் நாடக நூல்.இதை சுந்தரனார் 1891 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார். அந்த நூலின் துவக்கப் பாடல்தான், "நீராரும் கடலுடுத்த.." என்னும் பாடல்.சுந்தரம் பிள்ளை, அவர் வாழ்ந்த காலக்கட்டம் 1855 - 1897
 
"ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!" 

1970ஆம் ஆண்டு ,கலைஞர் அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்தது.

விவேகானந்தர் அமரிக்காவில் சமய மாநாட்டில் கலந்துகொண்டபின், திருவனந்தபுரத்தில் இந்து மறுமலர்ச்சியைப் பற்றிப் 1890ல் பேசியபோது, மனோன்மணியம் சுந்தரனார் அவர்களை நீங்கள் யார்" என்று விவேகானந்தர் கேட்டபோது, "தமிழர்களுக்குத் தனிச் சமயங்கள் உண்டு அந்தச் சமயங்களுக்குத் தனித் தத்துவங்கள் உண்டு' என்றார் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை..இவரைப்பற்றி விரிவான பதிவு 
தொடரும்.....
இவருடைய புதல்வர் கேரள மாநில நிதி அமைச்சராகவும் இருந்தார்.

சகம்முழுதும் நினதாயின் 
முதுமொழி நீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே. 

- மனோன்மணீயம்

#மனோன்மணியம்
#சுந்தரம்பிள்ளை
#தமிழ்த்தாய்வாழ்த்து

#KSRadhakrishnanPostings 
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
24-01-2018

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...