———————————————————-
திருச்சிராப்பள்ளி அருகே உள்ள எண்ணெயூரில், 1815 ஏப்ரல்., 6-ல் பிறந்தவர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை. சென்னையில் சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களிடம், கல்வி பயின்றார்.
திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர், இவருக்கு, ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்தார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். 19-ம் நூற்றாண்டில், தமிழில் அதிக நூல்கள் இயற்றியவர், இவர் தான்.
புராணம், காப்பியம், பிள்ளைத் தமிழ், அந்தாதி, கலம்பகம், தனிப் புராணம் உட்பட எண்ணற்ற நூல்களை இயற்றியுள்ளார். இரண்டு லட்சம் பாடல்களையும் இயற்றியுள்ளார். 1876 பிப்ரவரி 1-ல், தன் 61-வது வயதில் மறைந்தார்.
தமிழ் அறிஞர், மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை காலமான தினம் இன்று.

No comments:
Post a Comment