Tuesday, March 17, 2015

கதைசொல்லி- Kathai Solli.




கதைசொல்லி பற்றிய விசாரிப்புகளும், வாழ்த்துகளும், இதழ்கள் எங்கே கிடைக்குமென்ற கேள்விகளும் , குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், தொலைப்பேசி அழைப்புகள் மூலம் தமிழகம் மட்டுமில்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் ஈழத்தமிழர் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலிருந்தும் வந்திருந்தது.  ஒரே நாளில்  முகநூல் அறிவிப்பைப் பார்த்துவிட்டு நண்பர்கள்  அன்பர்களின் இந்த  அழைப்பும் எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியைத் தந்தது.

பிஜி தீவுகளிலிருந்தும், தென் ஆப்ரிக்காவிலிருந்தும் முறையே சரவண நாயகம், படையாச்சி ஆகியோர் பேசியிருந்தார்கள். இருவருமே தூய தமிழ் பேசுகிறவர்கள்.  தமிழகத்திற்கு இவர்கள் வந்ததில்லை. இவர்களுக்கும் கதைசொல்லி மீதிருக்கும் ஈடுபாடும், அக்கறையும் கண்டு மெய்மறந்தேன்.

தமிழகத்திலும் நல்லுள்ளங்கள் பலர் வாழ்த்துச் சொல்லுவதோடு, கதைசொல்லியை மீண்டும் கொண்டுவருவதற்கு நன்றி தெரிவிக்கும்போது எனக்கு என்ன சொல்லுவதென்று தெரியவில்லை.

பேராசிரியர்.அ.ராமசாமி அவர்களைப் போன்ற தமிழ் அறிஞர்கள் மகிழ்ச்சியோடு, பாசாங்குகள் இல்லாமல் வாழ்த்தினது உற்சாகத்தையே கொடுத்தது.

இதுவெல்லாம் தமிழால் வந்தபெருமை. பூமிப்பந்தெங்கும் வாழும் தமிழர்கள் பலர் ”தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற சொல்லுக்கு ஏற்ப வாழ்கின்றனர் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.



பொதிகை-பொருநை-கரிசல்.
 rkkurunji@gmail.com.

‪#KathaiSolli‬

No comments:

Post a Comment

Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth.

  Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth. Believing in yourself, ...