Saturday, March 25, 2017

சீர்திருத்த காங்கிரஸ்:

சீர்திருத்த காங்கிரஸ்:
--------------------
தமிழகத்தில்  இரண்டாவது பொதுத் தேர்தலிலே அதிருப்தியை காங்கிரஸ் சந்திக்க நேரிட்டது. சீர்த்திருத்த காங்கிரஸ் துவக்கப்பட்டது 1957 தேர்தலில் மொத்தமுள்ள 205 இடங்களில் காங்கிரஸ் கட்சி 151 இடங்களையும், திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முறையாக தேர்தல் களத்தில் நுழைந்து 13இடங்கள்-இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் சீர்திருத்தக் குழு 9-ம், கம்யூனிஸ்ட் கட்சி 4-ம், பார்வர்டு பிளாக் கட்சி 3-ம்  பிரஜா சோஷலிஸ்ட் கட்சி 2-ம், சோஷலிஸ்ட் கட்சி 1-ம் மற்றும் சுயேச்சைகள் 22 இடங்களையும் பெற்றனர்.

சீர்த்திருத்த காங்கிரஸ் எந்த நிலையில் உருவானது என்பதைப் பற்றி பலருக்கும் இதுவரை தெரியவில்லை. அரசியலில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களில் கூட சீர்த்திருத்த காங்கிரஸ் பற்றி சொன்னால் நம்ப முடியாமல் இருக்கின்றனர்.

விருதுநகர் தொகுதியில் காமராஜர் 1957-ல் போட்டியிட்ட பொழுது அவருக்கு எதிராக, கோவை வி.கே. பழனிசாமி கவுண்டர், அருப்புக்கோட்டை ஜெயராம ரெட்டியார், செங்கல்பட்டு வி.கே. ராமசாமி, கே.டி. கோசல்ராம், எஸ்.எஸ். மாரிசாமி, டி.ஜி. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் பணியாற்றுவார்கள் எனவும், அவர்களோடு சாத்தூர் எஸ்.ஆர். என்று அழைக்கப்பட்ட எஸ். இராமசாமி நாயுடு சேர்ந்து காமராஜருக்கு எதிராகச் செயல்படுவார் என்றும் செய்திகள் உலவியபொழுது, எஸ்.ஆரைப் பார்கக அவருடைய வகுப்புத் தோழரான சி. சுப்பிரமணியம், சாத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சி.எஸ். அங்கு எஸ்.ஆரைச் சந்தித்தவுடன் எதிராக இல்லை என்பது தெரிய வந்தது. சீர்த்திருத்த காங்கிரஸ் இந்த கால கட்டத்தில் உருவானது.

பல்வேறு சந்தேகங்களை வீழ்த்திக் காமராஜர் வெற்றி பெற்றார்.

இத்தேர்தல் காலத்தில் தூத்துக்குடி வருவாய்க் கோட்டத்தில் தமிழக ஆளுநராக இருந்த பி.சி. அலெக்சாண்டர் வருவாய்த் துறையில் பயிற்சி பெற்றார். தன்னுடைய நூலில் இந்தத் தேர்தல் காலத்தில் விளாத்திகுளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகளில் சாலை வசதி இல்லாமல்கூட தேர்தல் பணிக்காகத் தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இவர் பிற்காலத்தில் தமிழகம் மட்டுமல்லாமல் மராட்டிய ஆளுநராகவும், பிரதமராக இருந்த இந்திரா காந்திக்குத் தனிச் செயலாளராகவும், இந்திய அரசியலும், பன்னாட்டு அளவிலும் பல பொறுப்புகளைத் திறம்படச் செய்தவர்.

ஆதாரம் : நான் எழுதிய
'நிமிர வைக்கும் நெல்லை' (2004)

#சீர்திருத்தகாங்கிரஸ்
#1957தேர்தல்
#தமிழகஅரசியல்

#Ksrpost 
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
25.03.2017

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...