Sunday, March 26, 2017

சென்னை பாரிமுனை

சென்னை பாரிமுனையின் அதை ஒட்டிய பகுதிகளைக் குறித்து சில செய்திகள்:
-------------------------------------
தி.மு.க. துவங்க வேண்டும் என்று அண்ணா விவாதித்தது தேவராஜ் முதலியார் தெருவில் உள்ள அவர் நண்பரின் வீட்டில்தான்.
அண்ணா அவர்கள் இரா. செழியன் பிராட்வேயில் உள்ள கூட்டுறவு வங்கியின் மாடியில் ஒரு அறையில் தங்கியிருந்த போது,அங்கு அண்ணா தங்குவது வாடிக்கை.. அப்போதுதான் இரா. செழியனுடைய நோட் புத்தகத்திலிருந்து ஒரு தாளை கிழித்து திராவிட முன்னேற்ற கழகம் என்று இங்க் பென்னால் எழுதியதாக செய்திகள்.

தேவராஜ் முதலியார் தெருவில் சந்திர மௌலீஸ்வரர், சென்கேசவ பெருமாள் கோவில் என்ற சைவ வைணவ கோவில் பக்கத்தில் குங்குமம், சந்தனக் கடைகள் இருக்கும். அதன் வாசனை தெரு வழியாக செல்லும்போதே நுகரலாம்.

ஒருமுறை விடுதலை புலி இயக்கத் தலைவர் பிரபாகரனும், நானும் இப்பகுதிக்கு சென்றபோது சில நிமிடங்கள்  இப்பகுதியில் இருந்த கடைகளை பார்த்துக் கொண்டே குங்குமம், சந்தன நொடியை ரசித்து, அவர் நுகர்ந்தார்.

பிராட்வேயில் தான் பல பத்திரிகை அலுவலகங்கள் அப்போது இருந்தன.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனசக்தி அலுவலகமும் நான் தங்கியிருந்த எம்.யூ.சி விடுதியின் எதிர்புறத்தில் இருந்தது. கம்யூனிஸ்ட்கள் அதிகமாக தலைமறைவாக இருக்கும்போது பிராட்வே பகுதியில் வந்து செல்வது வாடிக்கை.
ஜீவானந்தம், பி. இராமமூர்த்தி, பாலதண்டாயுதம், ப. மாணிக்கம், ஏ. நல்லசிவன், சங்கரய்யா என எண்ணற்ற தோழர்கள்.
டீயை குடித்துக் கொண்டு பிராட்வே பகுதியில் வளம் வந்தனர்.
சுத்தானந்த பாரதி, கந்தகோட்டத்திற்கு அடிக்கடி தமிழறிஞர்கள் ரா.பி. சேதுப்பிள்ளை, வையாபுரி பிள்ளை, பாரிமுனையின் பஸ்ஸில் இறங்கி நடந்து செல்வது வாடிக்கை.
முதன் முதலாக,  சீன பல் டாக்டர் தன்னுடைய மருத்துவமனையை சைனா பஜாரில் அதாவது பாய் கடை அமைந்திருந்தது. இப்படியான உயிரோட்டமான சென்னையின் தலைபகுதிததான் பாரிமுனை அந்த கம்பீரமான இடத்தில்தான் துலாக்கோல் நிலையில் நீதிபரிபாலனத்தை கடந்த ஒரு நூற்றாண்டு கழிந்தும் தன்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டு இருக்கிறது.
#பாரிமுனை
#சென்னை
#திமுக
#அண்ணா
#பிரபாகரன்
#Ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
24.03.2017


No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...